கரூர் மாவட்டத்தில் திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதற்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்தனர். இந்த நிலையில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக பேருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டதால் கோவை பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ஆணைகட்டிக்கு செல்ல பேருந்து இன்று பொதுமக்கள் காத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அரசு பேருந்து நின்று கொண்டிருந்தது. அதன் கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. உடனே மக்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது ஓட்டுநரும் நடத்துனரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். இதனால் கோபமடைந்த மக்கள் அரசு உத்தியோகம், உணவு இடைவேளை, ஒரு மணி நேரம் தூக்கம் என்று கேலி செய்து அவர்களை கண்டித்துள்ளனர். மக்கள் தொடர்ந்து சத்தம் போட்டதால் ஓட்டுநரும் நடத்துனரும் கண்விழித்து மக்களை உள்ளே வர அனுமதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…