அதிமுக தலைமையில் அதிரடி மாற்றம்..? “மே 4 ரெடியா..?” EPS-க்கு கே.சி. பழனிசாமி விடுத்த எச்சரிக்கை..!!

By Soundarya on சித்திரை 25, 2026

Spread the love

முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி, அதிமுகவின் எதிர்காலம் மற்றும் தலைமை மாற்றம் குறித்து முன்வைத்துள்ள கருத்து மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றன. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அதிமுகவிற்குச் சாதகமாக அமையாவிட்டால், கட்சியில் ஒரு தலைமை மாற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்று அவர் எச்சரித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி (EPS) தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை விட, கட்சியின் உட்கட்சி மோதல்கள் மற்றும் தலைமைப் பண்பு குறித்த தற்காப்பு வாதங்களையே அதிகம் முன்வைத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், இந்தத் தேர்தல் முடிவுகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு பெரும் அக்னிப் பரீட்சையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தால், கட்சியில் சவால்களற்ற ஒரு நிகரற்ற தலைவராக எடப்பாடி பழனிசாமி உருவெடுப்பார் என்பதில் ஐயமில்லை. எடப்பாடி பழனிசாமியின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இந்த முக்கியமான தீர்ப்பு, மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளின் மூலம் தெரியவரும் என்று அவர் தனது கணிப்பைப் பகிர்ந்துள்ளார்.