குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் பிரீதி காஷ்யப், தனது 40-வது வயதிலேயே எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம் மருத்துவ உலகிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகாலக் கடுமையான உழைப்பு மற்றும் போராட்டத்திற்குப் பிறகு மருத்துவத்துறையில் சாதனை படைத்த ஒரு திறமையான மருத்துவர், இவ்வளவு இளம் வயதிலேயே மறைந்திருப்பது ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.
மருத்துவர்களும் கனவுகளும், போராட்டங்களும், குடும்பமும் கொண்ட சாதாரண மனிதர்களே என்பதை நினைவுபடுத்தும் இந்தத் துயரச் சம்பவம், வாழ்க்கையின் நிலையாமையை உணர்த்துவதாகப் பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர். உயிரிழந்த மருத்துவர் பிரீதி காஷ்யப்பிற்கு இரு சிறு குழந்தைகள் உள்ள நிலையில், தாயை இழந்து தவிக்கும் அக்குழந்தைகளுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இந்தத் துயரத்தைத் தாங்கும் சக்தியை இறைவன் நல்க வேண்டும் என மருத்துவ உலகமும் நெட்டிசன்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
