“எங்க சாவுக்கு அவன் தான் காரணம்”… 200 பவுன் நகைக் கொடுத்தும் அடங்காத பண வெறி… தாய், மகள் தற்கொலைக்கு முன் எழுதிய உருக்கமான கடிதம்…!

Spread the love

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வரதட்சணைப் பேய்க்கு மேலும் இரண்டு உயிர்கள் பலியாகியுள்ளன. ஓய்வுபெற்ற வேளாண் அதிகாரி ராஜீவ் என்பவரின் மகள் கிரீமாவிற்கும், வெளிநாட்டில் வேலை பார்க்கும் உன்னிகிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண் வீட்டார் தரப்பில் சுமார் 200 பவுன் தங்க நகைகளும் (சுமார் 1.6 கிலோ), வீடும் சீதனமாக வழங்கப்பட்டது. இவ்வளவு சொத்துக்கள் கொடுத்த பின்பும், கூடுதல் வரதட்சணை கேட்டு உன்னிகிருஷ்ணன் கிரீமாவைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

திருமணம் முடிந்த 25 நாட்களிலேயே கிரீமாவைப் பிரிந்து உன்னிகிருஷ்ணன் மீண்டும் வெளிநாட்டிற்குச் சென்றார். கடந்த ஆறு ஆண்டுகளாகத் தனது மனைவியுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்த அவர், அண்மையில் உறவினர் ஒருவரின் மரணத்திற்காக ஊருக்குத் திரும்பியுள்ளார். அப்போது கிரீமாவும் அவரது தாய் சஜிதாவும் அவரைச் சந்தித்துத் தங்களை ஏற்றுக்கொண்டு வாழுமாறு கெஞ்சியுள்ளனர். ஆனால், உன்னிகிருஷ்ணன் அவர்களை மிகக் கேவலமாகப் பேசி அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மனவேதனையடைந்த தாயும் மகளும், சயனைடு அருந்தி தங்கள் இன்னுயிரைத் துறந்தனர்.

தற்கொலைக்கு முன்பாக சஜிதா எழுதிய உருக்கமான கடிதத்தில், “பயன்படுத்திய உடையைக் கழற்றி எறிவது போலத் தன் மகளை உன்னிகிருஷ்ணன் நடுத்தெருவில் விட்டுச் சென்றார்” என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், உன்னிகிருஷ்ணன் தரப்பினர் தங்கள் சொத்தில் ஒரு பிடி மண்ணைக் கூட அனுபவிக்கக் கூடாது என்றும் அதில் வலியுறுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தப்பியோட முயன்ற உன்னிகிருஷ்ணனை மும்பை விமான நிலையத்தில் வைத்துப் போலீசார் கைது செய்துள்ளனர். வரதட்சணை எனும் சமூக அவலத்தால் ஒரு குடும்பமே சிதைந்துள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

சொந்த நட்சத்திரத்தில் குரு பகவான்…! இந்த 5 ராசிக்கு இனி அடிச்சது ஜாக்பாட்…! குபேர யோகத்தால் குவியப்போகும் பணம்…!

குரு பகவான் இன்று அதிகாலை புனர்பூச நட்சத்திரத்தில் பிரவேசித்துள்ள நிலையில், இதனால் மிதுனம், கடகம், சிம்மம், துலாம் மற்றும் தனுசு…

18 minutes ago

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

10 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

10 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

10 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

10 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

10 மணத்தியாலங்கள் ago