BREAKING: ரேஷன் அட்டைதாரகளுக்கு குட் நியூஸ்… தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!!

By Soundarya on வைகாசி 22, 2026

Spread the love

ரேஷன் அட்டைதாரர்களுக்கு, குறிப்பாக முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் ‘தாயுமானவர் திட்டத்தின்’ மூலம் இந்தச் சேவை வழங்கப்பட்டு வந்த நிலையில், இத்திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டதாகப் பரவிய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைச்சர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

மேலும், இத்திட்டத்தை எவ்வித தொய்வுமின்றித் தொடர்வதற்குக் தேவையான நிதி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் முழுமையாகச் செய்து கொடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். இத்திட்டம் நிறுத்தப்படவில்லை என்ற அமைச்சரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பயனாளிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது.