பஞ்சாப் மாநிலம் பட்டியாலா மாவட்டத்தில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை அருகில் குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையை தெரு நாய் ஒன்று கவ்வி சென்றதாக கூறப்படும் சம்பவத்தை இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக பஞ்சாப் மாநிலத்தின் பட்டியாலா காவல் துறை மூத்த கண்காணிப்பாளரும், தலைமை செயலரும் இரண்டு வாரங்களுக்குள் பதில் அளித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் ஆகஸ்ட் 27-ஆம் தேதி மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் கூறும் போது, மருத்துவமனையில் இருந்து எந்த குழந்தையும் காணாமல் போகவில்லை. குழந்தைகள் இறந்த சமீபத்திய அனைத்து நிகழ்வுகளிலும் முறையான ஆவணங்கள் கிடைத்த பிறகு உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது என கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
