திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் செவிலியராக வேலை பார்க்கிறார். இவரது கணவர் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறார். தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்த கவிதாவுக்கு இரவு பகல் என மாறிமாறி பணி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்க்கும் மதனகோபால் என்பவர் கவிதாவுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார்.
இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இது குறித்து கவிதா தனது கணவரிடம் கூறியதும், அவர் வேலைக்கு செல்ல வேண்டாம் என சொன்னதாக தெரிகிறது. இருப்பினும் மதனகோபால் கவிதாவுக்கு ஆடியோ மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பி தொந்தரவு அளித்துள்ளார்.
இதனால் கவிதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மதனகோபால், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி அமுதவல்லி, உறவினர்கள் சிவஞானம், மோகன் ஆகியோரை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்த மறுநாள் மதனகோபால் மீண்டும் கவிதாவை மிரட்டியுள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (மே 10) முதலமைச்சராகப்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு சென்னை நேரு உள்விளையாட்டு…
மலேசியாவில் டாக்ஸியில் பயணம் செய்த பெண் ஒருவர், ஓட்டுநரின் விசித்திரமான மற்றும் அச்சுறுத்தும் நடத்தையால் பயந்து, ஓடிக்கொண்டிருந்த காரில் இருந்து…
சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவில், புடவை அணிந்த பெண் ஒருவர் சிங்கங்கள் உலவும் பகுதிக்கு மிக அருகில்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவராக விஜய் பொறுப்பேற்கும் பதவியேற்பு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது. இந்த வரலாற்றுச்…
தமிழக அரசியல் வரலாற்றில் இன்று ஒரு முக்கிய மைல்கல்லாக அமையப் போகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர்…