தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ஷபானா. சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தனது க்யூட்டான சிரிப்பால் தனக்கென ஒரு இடத்தை பிடித்து பிரபலமானவர். இல்லத்தரசிகள் மற்றும் இளைஞர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட இந்த சீரியல் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஒளிபரப்பான நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது.
இந்த சீரியலில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ஷபானா. மேலும் விஜே அக்னி மற்றும் பிரியாராமன் உள்ளிட்ட பலர் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த சீரியலில் நடித்து ரசிகர்களை கவர்ந்த ஷபானா சீரியல் நடிகர் ஆர்யனை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு இவர் மீண்டும் சீரியலில் நடிப்பார் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த நிலையில், இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் களமிறங்கி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். கடந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் ஒரு ஆண்டை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் பவன் ரவீந்திராவுக்கு ஜோடியாக அஞ்சலி தேவி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ஷபானா. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து தான் விலகுவதாக அறிவித்தார் ஷபானா. இதையடுத்து மிஸ்டர் மனைவி சீரியலில் ஷபானாவுக்கு பதிலாக அஞ்சலி தேவி கேரக்டரில் நடிக்க, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘வானத்தைப் போல’ சீரியல் தேப்ஜானி மோடக் கமிட் ஆகி இருக்கிறாராம். இவருக்கு அஞ்சலி கதாபாத்திரம் பொருந்துமா..? இவருடைய நடிப்பு ரசிகர்களை கவருமா..? என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.