நடிகர் பப்லு பிரித்வி ராஜ்  மகன் யார் தெரியுமா?.. வெளியான UNSEEN புகைப்படங்கள் உள்ளே…..

By Begam

Published on:

நடிகர் பப்லு பிரித்வி ராஜ் தனது மகனுடன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் பப்லு பிரித்வி ராஜ் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கும் மேலாக வில்லனாகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டு வருகிறார். தனது ரசிகர்களால் ‘பப்லு’ என செல்லமாக அழைக்கப்படுகிறார். வெள்ளி திரையை தொடர்ந்து சின்ன திரையிலும் நடித்து கலக்கி வருகிறார்.

   

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பப்படும் ‘கண்ணான கண்ணே’ சீரியலில் கதையின் நாயகிக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த கதாபாத்திரத்தில் அவர் தன் மகளை வெறுக்கும் அப்பாவாக அவர் நடிக்கிறார். ஆனால் அவரது குடும்ப வாழ்க்கையில் அவர் தன் மகனை மிகவும் நேசிக்கிறார். 1994 இல் பீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு அகித் என்ற மகன் பிறந்தார். இவரது மகன் ‘ஆர்டிசம் குறைபாடு’ உள்ளவர். இதன் காரணமாக தனது மகனை வெறுத்து  ஒதுக்காமல் அவருக்காகவே தன் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். மேலும் இந்நோயின் தன்மைகளை குறித்தும், அவர்களை நாம் எவ்வாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை குறித்தும் விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்திக் கொண்டு வருகிறார்.

தோளுக்கு மேல் வளர்ந்த தனது மகனை  இன்னும் சிறுபிள்ளை போல் கவனித்துக் கொள்கிறார். வில்லனாக திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் இவர் ஒரு சூப்பர் ஹீரோ தான். தற்பொழுது இவர் தனது மகன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படங்கள்….