CINEMA
கிட்டத்தட்ட 150 படங்களுக்கும் மேல் நடித்த புரட்சித்தலைவர்.. முதலும் கடைசி படம் உருவாக காரணம் என்ன தெரியுமா.?
தமிழகத்தின் எங்கள் வீட்டு பிள்ளையாக வாழ்ந்து மறைந்த எம்ஜிஆரின் முதல் படமும் கடைசி படமும் எது என்றும், அந்தப் படம் உருவாக காரணம் என்ன எப்படி என்று தெரியுமா?. 17 ஜனவரி 1917 ஆண்டு இலங்கையில் “மேலகெத் கோபால் மேனன்” என்பவருக்கும் “இலவா” என்பவருக்கும் பிறந்தார். இவர் இலங்கையில் நாடக கலைஞராகவும் தன் வாழ்க்கையை பயணத்தை ஓட்டிக் கொண்டிருந்த சமயத்தில் சினிமா மேல் ஆர்வம் கொண்டு நடிப்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள சென்னையை நோக்கி பயணம் மேற்கொண்டார்.
அப்பொழுது தான் “ஆர்.டுங்கன்”அவர்கள் இயக்கத்தில் ஏ என் மருதாச்சலம் செட்டியார் அவர்கள் தயாரிப்பில் உருவான “சதி நீலாவதி” படம் மூலம் தமிழ் திரை உலகுக்கு எம்ஜிஆர் அவர்கள் முதன் முதலில் அறிமுகமானார். அதன் பின் எங்க வீட்டுப் பிள்ளை, அடிமைப்பெண், ரிக்ஷாகாரன், குடியிருந்த கோவில் போன்ற படங்களில் நடித்து மாபெரும் வெற்றியை கண்டு இந்திய சினிமா துறை வியக்கும் படி மாபெரும் நடிகர் ஆனார். அதன் பின்னதாக அவர் அரசியல்வாதியான அண்ணாதுரை அவர்களுடன் இணைந்து டி.எம்.கே திராவிட முன்னேற்ற கழகம் இணைந்து மக்களுக்கு சேவை செய்வதற்காக கட்சியில் இணைந்தார்.
பிற்பாடு அவர் அண்ணா இறந்தபின் தனிக்கட்சி ஒன்று ஆரம்பித்து ADM-கிலிருந்து பிரிந்து சென்றார். எம்ஜிஆர் ஆரம்பித்த தனி கட்சியான ஆதிதிராவிடர் அண்ணா முன்னேற்ற கழகம் ஏ.ஏ.டி.எம்.கே என்று ஆரம்பித்த மக்களுக்காக பணி செய்வதற்காக தனியாக களத்தில் இறங்கினார். மக்கள் நல பணி பலவற்றையும் செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். 24 டிசம்பர் 1987 ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு பிரிந்தார். அவர் பிரிந்த துயரத்தை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு பெரும் துக்கமாக இருந்தார்கள்.