மக்கள் அனைவருக்கும் சந்தோஷமாக நிம்மதியாக ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்று விருப்பம் இருக்கும். ஆனால் எல்லோராலும் அப்படி இருந்து விட முடியாது. சிலர் என்ன பிரச்சனை வந்தாலும் வந்தது வரட்டும் சமாளிக்கலாம் என்று ஒரு நிம்மதியான மனப்பான்மையைக் கொண்டு அன்றைய தினத்தை மகிழ்ச்சியாக கடத்துவார்கள். ஒரு சிலர் சிறிய விஷயமானாலும் அதை மண்டை மேல் ஏற்றிக்கொண்டு டென்ஷன் ஆகுபவர்களும் உண்டு. ஆனால் இன்றைய பரபரப்பான சூழலில் நிம்மதி மகிழ்ச்சி என்பது காணாமல் போய்விட்டது என்று சொல்லலாம். ஆனால் சிங்கப்பூரில் வாழும் மக்கள் எப்போதுமே சந்தோஷமான ஒரு வாழ்க்கையை மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். அதற்காக அவர்கள் ஒரு சில பழக்கங்களை வைத்திருக்கிறார்கள் அது என்னவென்று இனி காண்போம்.
சிங்கப்பூர் மக்கள் விதவிதமான உணவுகளை தங்களது அன்றாட வாழ்க்கையில் இணைத்துக் கொள்கின்றனர். சிக்கன் உணவுகள் முதல் பல்வேறு ஆசிய உணவுகள் வரை அனைத்தையும் இவர்கள் தங்களது டயட்டில் இணைத்துக் கொள்கின்றனர். என்ன உணவுகள் ட்ரெண்டிங்கில் இருக்கிறதோ அதை அனைத்தையும் அவர்கள் சாப்பிடுவார்கள். இது ஒரு சமூக நிகழ்வாகவும் அங்கு நடக்கிறது. இதனால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு உதவுகிறது.
சிங்கப்பூர் மக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். பொழுதுபோக்கு பூங்காக்கு செல்வது ஜாக்கிங் சைக்கிளிங் பிக்னிக் என தங்களை மகிழ்ச்சி படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே பல விஷயங்களை செய்கிறார்கள்.
அதேபோல் சிங்கப்பூர் மக்கள் தங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள அடிக்கடி வெக்கேஷன் செல்லும் பழக்கம் உடையவர்கள். பல்வேறு ஹோட்டல்கள் இடங்கள் என பல இடங்களுக்கு வெக்கேஷன் செல்வதும் வார இறுதியில் ஸ்டேகேஷன் செல்வதும் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு உதவுகிறது.
சிங்கப்பூர் மக்கள் யோகா ஜூம்பா பேட்மிட்டன் போன்ற பல உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். இது அவர்களை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க உதவுகிறது. அது மட்டுமில்லாமல் புத்தாண்டு தீபாவளி கிறிஸ்மஸ் பொங்கல் என எந்த பண்டிகை வந்தாலும் அதை ஒன்றாக குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடுகிறார்கள். இது அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க உதவுகிறது. அது மட்டுமில்லாமல் வேலையையும் தனிப்பட்ட வாழ்க்கையும் அவர்கள் ஒன்றாக பேலன்ஸ் செய்து கொண்டு போகிறார்கள். நேரத்துக்கு வேலை செய்து முடிப்பது குடும்பத்தினர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என இரண்டையும் சரிவர பார்த்துக் கொள்வதால் அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள்.
செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் பகுதியில் வசித்து வரும் கட்டிடத் தொழிலாளி தம்பதியினரின் 16 வயது மகள் காவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்த முன்னாள் காதலனை இளம்பெண் ஒருவர் ஓட்டல் அறைக்குள் வைத்து…
பெண் அரசியல்வாதிகள் குறித்துப் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாடு…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவுக்கு வரும் நிலையில், மத்திய கிழக்கில்…
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி 12 பேர் பலியாகினர்.…
மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, பெர்ஷியன் வளைகுடாவில் நூற்றுக்கணக்கான வணிகக் கப்பல்கள் கடந்த 54…