வாட்ஸ்அப்பில் ‘ஏர்டெல் க்ரோத்’ என்ற பெயரில் உலா வரும் லிங்க்குகளை பொதுமக்கள் யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் நிபுணர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 100 ஜிபி (100 GB) இலவச கிளவுட் ஸ்டோரேஜ் வழங்கப்படுவதாகக் கூறி வாட்ஸ்அப் பயனர்களுக்கு அனுப்பப்படும் இந்த போலி செய்திகள் முற்றிலும் ஏமாற்று வேலை என்றும், இதன் மூலம் பயனர்களின் வங்கி விவரங்கள் மற்றும் தனிப்பட்ட தரவுகள் திருடப்படும் ஆபத்து இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
எனவே, இதுபோன்ற கவர்ச்சிகரமான போலி செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான airtel.in என்பதைத் தவிர வேறு எந்தவொரு அறிமுகமில்லாத மூன்றாம் தரப்பு லிங்க்குகளையும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும், விழிப்புணர்வுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
