தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சியை கவிழ்க்கும் சதித் திட்டம் குறித்த வழக்கு விசாரணையில், தற்பொழுது திடுக்கிடும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் சென்னைக்குள்ளேயே தவெக தனது அரசியல் ஆதிக்கத்தைச் செலுத்தி வரும் நிலையில், அங்கிருக்கும் இரண்டு தவெக சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) குறிவைத்து ஒரு ரகசிய ‘மூளைச்சலவை’ குழு பேச்சுவார்த்தை நடத்தியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
எனினும், அந்தப் பேச்சுவார்த்தைக்கு அந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தற்பொழுது கடன் மற்றும் கடுமையான பொருளாதாரச் சிக்கல்களில் தவித்து வரும் தவெக சட்டமன்ற உறுப்பினர்களைக் கண்டறிந்து, அவர்களைப் பணத்தாசை காட்டி சதிப் பொறியில் சிக்க வைக்கப் புதிய வியூகம் வகுக்கப்பட்டு வருவதாக வெளியாகி இருக்கும் தகவல், அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
