தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் எதிர்பாராத அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அரை நூற்றாண்டு கால அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததும், ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் போன்றோர் தி.மு.க-வில் இணைந்ததும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தது மிகப்பெரிய அரசியல் திருப்பமாகக் கருதப்படுகிறது. மேலும், சேலம் மாவட்டத்தில் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க முன்னாள் அமைச்சர் செம்மலையைத் தங்கள் பக்கம் இழுக்க அமைச்சர் எ.வ.வேலு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
வன்னியர் சமூகத்தில் செல்வாக்கு கொண்ட செம்மலை தி.மு.க-விற்கு வந்தால், மேட்டூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரத் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும் என்பது அக்கட்சியின் கணக்காக உள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளிக்க மறுத்த செம்மலைக்கு, கடந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக அறியப்படும் பூங்குன்றன், தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய சூழல் மற்றும் தமிழக…