தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கியத் தொகுதிகளில் தி.மு.க-வின் வெற்றியை உறுதி செய்யவும், விஜய்யின் வாக்கு வங்கியைச் சிதைக்கவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு புதிய வியூகத்தை வகுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக உதயநிதியின் தனிப்பட்ட ‘இளைஞர் படை’ களமிறக்கப்பட்டு, குறிப்பாக விஜய்யின் செல்வாக்கு மிகுந்த பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் தி.மு.க-வின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் தீவிரமாகச் செயல்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தேர்தல் முடிவுகளில் இந்த வியூகம் வெற்றிகரமாகப் பிரதிபலித்தால், சிறப்பாகச் செயல்பட்ட அந்த இளைஞர் படையினருக்குக் கட்சியில் முக்கியப் பதவிகள் ‘ஜாக்பாட்’ பரிசாக வழங்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளாராம். மற்ற தொகுதிகளில் தவெக-வின் பலத்தைக் குறைக்கும் நோக்கில் இவர்கள் களம் கண்ட நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே இந்த ‘உதயநிதி செக்’ எந்தளவுக்கு வேலை செய்துள்ளது என்பது தெரியவரும்.
