தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட எதிர்பாராத தோல்விக்குப் பிறகு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அரசியல் அணுகுமுறையை முற்றிலும் மாற்றியமைத்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக வெற்றிக் கழகத்தையும் அதன் தலைவர் விஜயையும் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் விட்டதே திமுகவின் ஆட்சி இழப்புக்கு முக்கிய காரணம் என்று அவர் தற்பொழுது உணர்ந்துள்ளார். அப்போது அதிமுக மற்றும் மத்திய அரசை மட்டுமே முதன்மை எதிரியாகக் கருதி திமுக களம் கண்டதால், தவெகவின் அசுர வளர்ச்சியை அவர்கள் முளையிலேயே கிள்ளத் தவறிவிட்டனர். இந்தத் தவறை இனி எப்போதும் செய்யக் கூடாது என்பதில் ஸ்டாலின் தீவிரமாக இருக்கிறார்.
அதிமுகவை விட தவெக தற்பொழுது திமுகவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஸ்டாலின் குடும்பத்தினரை நேரடியாகக் குறிவைத்து விமர்சித்து வருகிறது. சட்டமன்றத்திற்குள்ளேயே திமுகவின் கட்சி நிதி விவகாரங்களை முதலமைச்சர் விஜய் விமர்சித்தது மற்றும் சபரீசன் வரை தவெகவினர் இறங்கி அடிப்பது ஆகியவை திமுகவினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக கூட ஸ்டாலினின் குடும்ப விவகாரங்களை இந்த அளவிற்குச் சீண்டியதில்லை என்பதால், தவெகவின் இந்த ஆக்ரோஷமான அணுகுமுறைக்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்க திமுக தலைமை முடிவெடுத்துள்ளது.
இதன் விளைவாக, முதலமைச்சர் விஜய்யின் ஒவ்வொரு விமர்சனத்திற்கும் காலதாமதமின்றி திமுக தரப்பிலிருந்து காரசாரமான பதிலடிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் பரபரப்பை ஏற்படுத்திய “அப்பாவை காணோம்” விவகாரம் உட்பட, மேடைகளில் எழும் அனைத்துப் புகார்களுக்கும் மு.க.ஸ்டாலின் நேரடியாகவே களமிறங்கிப் பதிலளித்து வருகிறார். சமூக வலைதளங்கள் மற்றும் பொது மேடைகள் என இரண்டிலுமே தவெகவிற்கு எதிரான தங்களது அரசியல் நகர்வுகளை திமுகவின் உயர்மட்டத் தலைவர்கள் முதல் அடிமட்டத் தொண்டர்கள் வரை தீவிரப்படுத்தியுள்ளனர்.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான அரசு இதுவரை பெரிய அளவிலான தவறுகள் எதையும் இழைக்கவில்லை என்றாலும், திமுக அதற்குரிய நல்வாய்ப்பிற்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. மக்கள் பிரச்னையோ அல்லது நிர்வாகக் குறைபாடோ, புதிய அரசு ஏதேனும் ஒரு முக்கிய விவகாரத்தில் சிக்கினால், அதனைப் பயன்படுத்தி தவெக-வை அரசியல் ரீதியாக முற்றிலுமாக முடக்க திமுக வியூகம் வகுத்து வருகிறது. இனி எந்த இடத்திலும் விஜய்க்கு விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற ஸ்டாலினின் இந்த அதிரடி முடிவு, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதற்கு எதிராக முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவைத்…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும், 'திரைக்கதை மன்னர்' என்று போற்றப்படுபவருமான பாக்யராஜ் அவர்களின் திடீர் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும், குறிப்பாக…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் திருப்பமாக, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறுவதாக அறிவித்துள்ளது. சென்னை அண்ணாநகரில்…
தமிழ் திரையுலகின் மாபெரும் இயக்குநரும் திரைக்கதை மன்னனுமான கே. பாக்யராஜ் அவர்களின் மறைவு, ஒட்டுமொத்த சினிமா உலகையும் பெரும் சோகத்தில்…
தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் இறுதித் திரைப்படமான 'ஜனநாயகன்' படத்தின் தயாரிப்பாளரும்,…
சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் உள்ள சக்ரதர் நகர் பகுதியில், நள்ளிரவில் வீட்டின் ஜன்னல் ஏசி கம்ப்ரெஸர் திடீரென பயங்கர…