தமிழக அரசியல் களத்தில் “தேர்தல் அறிக்கைதான் கதாநாயகன்” என்ற கருணாநிதியின் தாரக மந்திரத்தை, 2026 தேர்தலுக்காக முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். வெறும் இலவச அறிவிப்புகளோடு நின்றுவிடாமல், தமிழகத்தின் நிலப்பரப்பை நான்கு பிராந்தியங்களாகப் பிரித்து, மண்டல வாரியான வளர்ச்சியை உறுதி செய்ய ரூ. 20,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பு தற்போதைய ‘ஹாட் டாக்’ ஆக மாறியுள்ளது. சென்னை மையப்படுத்தப்பட்ட வளர்ச்சியை மாற்றி, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளும் சமச்சீரான பொருளாதார முன்னேற்றத்தைப் பெறுவதே இந்த ‘ஸ்பெஷல் ரூட் மேப்’-ன் முக்கிய நோக்கமாகும்.
மத்திய மண்டலத்தைப் பொறுத்தவரை, திருச்சியை மையப்புள்ளியாகக் கொண்டு டெல்டா மாவட்டங்களை உள்ளடக்கிய ஒரு புதிய பொருளாதாரப் புரட்சிக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சியைச் சுற்றிப் புதிய விரைவுச் சாலைகள் (Expressways) அமைப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, வர்த்தகத்தை வேகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்ட டெல்டா பகுதிகளில் ‘வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளை’ (Agro-based industries) உருவாக்கி, அங்குள்ள இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை அள்ளிக் கொடுப்பதே இந்த மண்டலத்தின் பிரதான இலக்காகும்.
தெற்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் தொழில்மயமாக்கலை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தெற்கே, தூத்துக்குடி மற்றும் நெல்லையை இணைத்து ஒரு பிரம்மாண்ட தொழில் காரிடார் அமைக்கப்படுவதோடு, கன்னியாகுமரியில் கப்பல் கட்டும் தளம் மற்றும் சுற்றுலாவிற்கு அதீத முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அதேபோல், வட தமிழகத்தில் சென்னையின் தொழிற்சாலை பெல்ட்டை ராணிப்பேட்டை வரை நீட்டித்து, ஐடி (IT), இவி (EV) மற்றும் ஆட்டோமொபைல் துறைகளின் உலகளாவிய மையமாக (GCC Hub) மாற்றும் தொலைநோக்குத் திட்டம் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
தொழில்முனைவோரின் கோட்டையான மேற்கு மண்டலத்திற்கு (கொங்கு பெல்ட்), பிரத்யேகமாக ரூ. 2,000 கோடி மதிப்பில் தனி ‘தொழில் வளர்ச்சித் திட்டம்’ அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வலுவாக உள்ள ஜவுளித் துறையுடன், எதிர்காலத் தேவைகளான ராணுவ தளவாட உதிரிபாகங்கள் (Defence components) மற்றும் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பில் இந்த மண்டலத்தை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கொங்கு மண்டலத்தின் பாரம்பரியத் தொழில்கள் நவீனமயமாக்கப்பட்டு, புதிய முதலீடுகள் ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000 போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுக்குப் பின்னால், தமிழகத்தின் ஒவ்வொரு இன்ச் நிலத்தையும் தொழில்மயமாக்கும் இந்தத் தொலைநோக்குத் திட்டங்கள் காகிதத்தில் ‘கெத்து’ காட்டுகின்றன. நிர்வாக ரீதியாகத் தமிழகத்தை நான்கு திசைகளாகப் பிரித்துச் செயல்படுத்தப்படும் இந்த உத்திகள், பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து உண்மையான வளர்ச்சியைத் தருமா என்பது மக்களின் தீர்ப்பில்தான் தெரியும். ‘கலர் கலர்’ வாக்குறுதிகள் களத்தில் நிஜமாகுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!
மத்திய பிரதேசத்தில் 7 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, ஜபல்பூர்…
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களால் அதிமுக பல பிரிவுகளாக உடைந்தது. இறுதியாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பொறுப்பை…
வாட்ஸ்அப்பில் ‘ஏர்டெல் க்ரோத்’ என்ற பெயரில் உலா வரும் லிங்க்குகளை பொதுமக்கள் யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என சைபர்…
அமெரிக்காவின் இரண்டாம் பெண்மணியான உஷா வான்ஸ் குழந்தைகளுக்காக நடத்தும் 'ஸ்டோரிடைம் வித் தி செகண்ட் லேடி' என்ற சிறார் பாட்காஸ்ட்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் தான் சோர்வடையவில்லை என்றும், சோர்வு நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ளும் தலைமைப் பொறுப்பு தனக்கு…
இண்டிகோ நிறுவனம் குறைந்த லக்கேஜுடன் பயணிப்பவர்களுக்காக 'இண்டிகோ லைட்' என்ற புதிய எகானமி கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…