அவுட்டான 3 அமைச்சர்கள்… அப்பாவுக்குப் பதில் மகனுக்கு சீட்! அண்ணாநகர் டூ வில்லிவாக்கம் – வாரிசுகளின் ஆதிக்கம்?… 2026-க்காக திமுக வெளியிட்ட அதிரடி லிஸ்ட்…!

By Nanthini on பங்குனி 29, 2026

Spread the love

2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்புடன் திமுக களம் காண்கிறது. நேற்று அதன் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்கியுள்ள நிலையில், திமுக 163 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். தற்போதைய அமைச்சரவையில் உள்ள முக்கிய முகங்களுக்கு மீண்டும் அதே தொகுதிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, முதலமைச்சர் ஸ்டாலின் கொளத்தூரிலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியிலும் போட்டியிடுகின்றனர். இவர்களுடன் அமைச்சர்கள் சேகர்பாபு (துறைமுகம்), ஏ.வ.வேலு (மயிலாப்பூர்), மா.சுப்பிரமணியன் (சைதாப்பேட்டை) மற்றும் எழிலன் நாகநாதன் (ஆயிரம் விளக்கு) ஆகியோருக்கும் பழைய தொகுதிகளே ஒதுக்கப்பட்டுள்ளன.

அதேசமயம், சிட்டிங் அமைச்சர்கள் சிலருக்கு இந்த முறை சீட் மறுக்கப்பட்டிருப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த முறை அமைச்சர்களாகப் பணியாற்றிய கயல்விழி செல்வராஜ் (தாராபுரம்), மனோ தங்கராஜ் (பத்மநாபபுரம்) மற்றும் ஆர்.காந்தி (ராணிப்பேட்டை) ஆகிய மூவருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவர்களில் ஆர்.காந்திக்கு பதிலாக அவரது மகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், மற்ற இருவருக்கும் தொகுதிப் பங்கீடு அல்லது கட்சி ரீதியான மாற்றங்கள் காரணமாக வாய்ப்பு பறிபோயுள்ளதாகத் தெரிகிறது.

   

இந்தத் தேர்தலின் முக்கிய அம்சமாகப் புதிய வாரிசுகளின் வருகை அமைந்துள்ளது. அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி ராணிப்பேட்டையிலும், அண்ணாநகர் எம்.எல்.ஏ மோகனின் மகன் கார்த்தி வில்லிவாக்கத்திலும் அறிமுகமாகின்றனர். மேலும், மறைந்த ஜெ.அன்பழகனின் மகன் ராஜா அன்பழகனுக்கு தி.நகர் தொகுதியும், அமைச்சர் பொன்முடிக்கு பதிலாக அவரது மகன் கௌதம சிகாமணிக்கு திருக்கோவிலூர் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த பழைய முகங்களுடன், வாரிசு அரசியல் விமர்சனங்களுக்கு மத்தியிலும் புதிய இளம் ரத்தத்தைப் பாய்ச்ச திமுக தலைமை திட்டமிட்டுள்ளதை இந்தப் பட்டியல் காட்டுகிறது.