ரூ. 8000 கூப்பனை கையில் எடுத்த திமுக.. தடுத்து நிறுத்திய தேர்தல் ஆணையம்…. பின்னணியில் உள்ள அதிர்ச்சித் தகவல்…!

Spread the love

தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுகவின் ரூ.8,000 மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் கூப்பன் திட்டம் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. வருமான வரி செலுத்தாத குடும்பத் தலைவிகளுக்கு இந்த கூப்பன் வழங்கப்படும் என்றும், இதைக் கொண்டு புதிய மின்னணு சாதனங்களை வாங்கவோ அல்லது பழையவற்றை மாற்றிக்கொள்ளவோ முடியும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. இத்திட்டத்தை முன்வைத்து பாலக்கோடு திமுக வேட்பாளர் செந்தில் குமார் உள்ளிட்டோர் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது, தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என அதிமுக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், திமுக ஆதரவாளர் ஒருவர் தனது எக்ஸ் (X) தளத்தில், “பொதுமக்களிடம் ரூ.8,000 கூப்பன் மாடல் தந்து வாக்கு சேகரிக்க இந்திய தேர்தல் ஆணையத்திடம் திமுக முறையான அனுமதி பெற்றுள்ளது” எனப் பதிவிட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், மாற்றுத் திறனாளிகளோ அல்லது பிற கட்சியினரோ எதிர்ப்பு தெரிவித்தால் அனுமதி நகலை காட்டுங்கள் என்றும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, தமிழக தேர்தல் அதிகாரி இதற்கு நேரடியாகப் பதிலளித்து ஒரு முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார்.

தமிழக தேர்தல் அதிகாரி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் அளித்துள்ள விளக்கத்தில், குறிப்பிட்ட அந்தச் சான்றிதழ் என்பது மின்னணு ஊடகங்களில் (Electronic media) விளம்பரங்களை ஒளிபரப்புவதற்காக மட்டுமே வழங்கப்பட்டது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அதாவது, தொலைக்காட்சிகளிலோ அல்லது இணையத்திலோ வீடியோ வடிவில் விளம்பரம் செய்யவே அனுமதி அளிக்கப்பட்டதே தவிர, காகித வடிவிலான கூப்பன்களையோ அல்லது துண்டுப் பிரசுரங்களையோ அச்சிட்டு விநியோகிக்க அந்தச் சான்றிதழ் அனுமதி அளிக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், அச்சிடப்பட்ட பிரசுரங்கள் அனைத்தும் இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 இன் பிரிவு 127A மற்றும் நடைமுறையில் உள்ள மாதிரி நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றியே இருக்க வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார். திமுக ஆதரவாளர் வெளியிட்ட தகவல் உண்மைக்கு புறம்பானது மற்றும் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தக் கூடியது என்றும் தேர்தல் அதிகாரி கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் இது போன்ற தவறான தகவல்களைப் பரப்புவது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், அரசியல் கட்சியினரிடையே இந்த எச்சரிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

3 மணத்தியாலங்கள் ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

3 மணத்தியாலங்கள் ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

4 மணத்தியாலங்கள் ago