தனியார் பள்ளிகளின் அனுமதிக்காக ரூ.100 கோடி பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, திமுக நிர்வாகியான PT அரசகுமாரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இவர் திமுக செய்தி தொடர்பு துணைத் தலைவராகவும், கொள்கை பரப்புச் செயலாளர்களில் ஒருவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளின் அனுமதி வழங்குவதற்காக லஞ்சம் பெறப்பட்டதாக தவெக அமைச்சர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த திடீர் கைது நடவடிக்கை தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
