திமுக அயலக அணிச் செயலாளரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான எம்.எம். அப்துல்லா அவர்களின் தாயார் நபீசா பீவி (85) வயது மூப்பு மற்றும் உடல்நலக் கோளாறுகள் காரணமாக இன்று காலை 9.30 மணிக்கு காலமானார். பாசத்துடன் வளர்த்து ஆளாக்கிய அன்னையின் மறைவால் துயரத்தில் இருக்கும் எம்.எம். அப்துல்லா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு திமுக தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் தொடர்ந்து தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பாசத்துடன் வளர்த்து சான்றோனாக்கி மகிழ்ந்த அன்னையை இழந்து வாடும் தம்பி அப்துல்லாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் திமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான தங்கம் தென்னரசு வெளியிட்ட பதிவில், அன்புத் தாயாரை இழந்து வாடும் சகோதரர் அப்துல்லாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் இந்தத் துயரமான நேரத்தில் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
