சபாஷ் சரியான போட்டி…. விஜய்க்கு எதிராக இடைத்தேர்தலில் களமிறங்கும் கனிமொழி… திமுக போட்ட பக்கா பிளான்… அலறும் அரசியல் வட்டாரம்..!

By Nanthini on ஆடி 20, 2026

Spread the love

தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் (விராலிமலை) மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர்) உட்பட 6 முக்கியச் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளனர். மரகதம் குமாரவேல் (மதுராந்தகம்), எஸ். ஜெயகுமார் (பெருந்துறை), பி. சத்யபாமா (தாராபுரம்) மற்றும் இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோரும் இதில் அடங்குவர். ஏற்கனவே தவெக தலைவர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியையும் சேர்த்து, தற்போது தமிழகத்தில் மொத்தம் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன.

இப்படித் திடீரென 7 தொகுதிகள் காலியானதால் உடனடியாக இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதைக் சுட்டிக்காட்டி, திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஜூலை 31 வரை இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தங்களது அடுத்தகட்ட தேர்தல் திட்டங்களை நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

   

நீதிமன்றத் தடை ஒருபுறம் இருந்தாலும், பிரதான எதிர்க்கட்சியான திமுக காலியாக உள்ள தொகுதிகளில் தற்போதே தீவிர களப்பணியைத் தொடங்கியுள்ளது. தவெகவின் அதிவேக வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், தங்களது பாரம்பரிய வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்ளவும் திமுக தலைமை தீவிர வியூகங்களை வகுத்து வருகிறது. இதன் முக்கிய அங்கமாக, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் கனிமொழி கருணாநிதியை இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வைக்க வேண்டும் என்ற பலத்த கோரிக்கைகள் திமுகவிற்குள் எழுந்துள்ளன.

   

ஆளும் தவெக தலைவரான விஜய்க்குப் பெண்கள் மத்தியில் வலுவான ஆதரவு இருப்பதாகக் கருதப்படும் நிலையில், அதை முறியடிக்க திமுகவிடம் இருக்கும் வலுவான முகம் கனிமொழி மட்டுமே என அக்கட்சியினர் நம்புகின்றனர். கனிமொழி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இடைத்தேர்தல் மூலம் மாநிலச் சட்டமன்றத்திற்குள் நுழைந்தால் அது திமுகவிற்குப் பெரும் பலமாக அமையும். மகளிர் நலத்திட்டங்கள் மற்றும் பெண் வாக்காளர்களைக் கவரும் கனிமொழியின் ஆளுமை, தவெகவின் வாக்கு வங்கியைப் பலவீனப்படுத்தும் என்ற அரசியல் கணிப்போடு திமுக காய்களை நகர்த்தி வருகிறது.