தமிழக அரசியலில் பரபரப்பு..! திமுக – காங்கிரஸ் கூட்டணி… செல்வப்பெருந்தகை போட்ட அதிரடி கண்டிஷன்..!!

By Soundarya on தை 10, 2026

Spread the love
தமிழகத்தில் ‘இந்தியா’ கூட்டணி மக்கள் ஆதரவுடன் மிக வலிமையாகச் செயல்பட்டு வருகிறது. மதச்சார்பற்ற கொள்கைகளைப் பாதுகாப்பதில் இக்கூட்டணி உறுதியாக இருக்கிறது. கூட்டணியைப் பலவீனப்படுத்தும் செயல்களை காங்கிரஸ் தொண்டர்கள் அனுமதிக்கக் கூடாது என்றும், தமிழகப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் குறிப்பிட்டபடி, காங்கிரஸின் ஐவர் குழு திமுகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் திமுக – காங்கிரஸ் இடையிலான உறவு மிகவும் கட்டுக்கோப்பாக உள்ள நிலையில், கூட்டணி தொடர்பான இறுதி முடிவுகளை மாநிலத் தலைமை தேசியத் தலைமையுடன் ஆலோசித்தே எடுக்கும் என்று செல்வப்பெருந்தகை விளக்கினார். எனவே, கட்சியின் கண்ணியம் மற்றும் கூட்டணியின் நலன் கருதி, இது குறித்து நிர்வாகிகள் யாரும் பொதுவெளியில் தன்னிச்சையாகக் கருத்துகள் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.