மக்களே மாட்டிக்காதீங்க… உங்களுக்கு தீபாவளி பரிசு காத்திருக்கு?… சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை…!

Spread the love

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தாலும் சில மோசடிக்காரர்கள் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சைபர் கிரைம் போலீசார் புதிய எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டுகளை புதுப்பிக்க வேண்டும், வங்கி கணக்கு புதுப்பிக்க வேண்டும், ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளது, நீங்கள் பரிசு வென்றீர்கள் என பல விஷயங்கள் கொண்டு சைபர் குற்றங்கள் நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக மூத்த குடிமக்களை குறிவைத்து இது போன்ற குற்றங்கள் நடைபெறுகின்றன.

செல்போன்களுக்கு காவல்துறை போலவும் வங்கிகளில் இருந்து மெசேஜ் அனுப்பப்படுவது போலவும் போலி கணக்குகளை வைத்து லிங்க் அனுப்பி பணம் மோசடி நடந்து கொண்டிருக்கிறது. தற்போது தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் பரிசு கூப்பன் விழுந்துள்ளது, பரிசு கிடைத்துள்ளது என்ற பெயரில் அதிக அளவில் சைபர் மோசடி புகார்கள் நடைபெறுவதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. போலியான இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தள பக்கங்களில் வரும் விளம்பரங்களை பார்த்து மக்கள் தங்களுடைய தகவல்களை பகிர்ந்து ஏமாற வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற மோசடிகளில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Nanthini

Recent Posts

“5 முன்னாள் அமைச்சர்கள், 10 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்”…. ஒரே நாளில் 15,000 பேர்…. விஜய்யின் கூடாரத்திற்கு மாறும் தமிழக அரசியல்…. அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு…!

தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் சூழலில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் இருந்து முக்கியப் புள்ளிகள் விலகி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்…

8 minutes ago

“சாப்பாட்டில் விஷம் வச்சும் சாகலனு… தூங்கும்போது காதில் விஷம் ஊற்றிய மனைவி”… அதிகாலையில் அலறி அடித்துக்கொண்டு ஓடிய கணவன்…. அடுத்து வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள புழுதிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (50). கூலித் தொழிலாளியான இவருக்கு உமாராணி என்ற…

14 minutes ago

நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்… 8 வயது சிறுமி வசந்தாவிற்கு பாஸ்டர் வீட்டில் நடந்த கொடுமை… அடுத்த நொடியே பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி மாவட்டம், தாரகொண்டா கிராமத்தில் அரங்கேறியுள்ள இந்த கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கியுள்ளது. அப்பகுதியில் உள்ள…

21 minutes ago

“எழுத்துத் தேர்வு கிடையாது, ஆன்லைன் எக்ஸாம் மட்டுமே”… Degree முடித்தவர்களுக்கு வங்கியில் 6,715 காலிப்பணியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க…!

வங்கிகளில் அசிஸ்டெண்ட் மேனேஜர் ஆக வேண்டும் என்ற கனவோடு இருப்பவர்களுக்கு வங்கி பணியாளர் தேவாணையம் (IBPS) ஒரு பொன்னான வாய்ப்பை…

23 minutes ago

“அந்த சிஸ்டத்தையே மாத்துங்க”…. விஜய்யின் மெகா கூட்டணிக்கு ‘நோ’ சொன்ன கம்யூனிஸ்ட்கள்…. அடுத்த சில மணி நேரங்களில் நடந்த அதிர்ச்சி திருப்பம்..!

தமிழக அரசியல் களம் தற்போது அடுத்தடுத்த திருப்பங்களை சந்தித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தோழமை கட்சிகளின் கூட்டத்தில் இடதுசாரி…

32 minutes ago