அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ராமதாஸ் தரப்புப் பொதுக்குழுவில் பரிந்துரை செய்துள்ளது. பாமகவில் பிளவு ஏற்படுத்தும் வகையில் அன்புமணி செயல்பட்டதாக சிறப்பு பொதுக்குழுவில் ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை வெளியிட்டது. அன்புமணி மீது சுமார் 16 குற்றச்சாட்டுகளை சுமத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ராமதாஸ் தரப்பு பொதுக்குழுவில் பரிந்துரை செய்துள்ளது.
