பிரபல இயக்குனரான வெற்றிமாறன் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு ரிலீசான பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். முதல் படமே சூப்பர் ஹிட் ஆனதால் வெற்றிமாறனுக்கு அடுத்தடுத்த படங்களை இயக்கும் வாய்ப்பு வந்தது. இதனை அடுத்து 2016-ஆம் ஆண்டு வெற்றிமாறன் ஆடுகளம் திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு சிறந்த இயக்குனர் சிறந்த திரைக்கதை ஆசிரியர் உள்ளிட்ட ஆறு தேசிய விருதுகள் கிடைத்தது. பின்னர் உதயம் nh4, நான் ராஜாவாகப் போகிறேன், பொறியாளன், காக்கா முட்டை உள்ளிட்ட படங்களை வெற்றிமாறன் தயாரித்தார்.
அசுரன், வடசென்னை, விடுதலை ஆகிய திரைப்படங்களும் வெற்றிமாறனின் சினிமா வாழ்க்கையில் பெரும் வரவேற்பை தேடி தந்தது. தற்போது அடுத்தடுத்த படங்களை இயக்கி வருகிறார். அப்படி வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ஆடுகளம். இந்த திரைப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்த நிலையில் அவருக்கு ஜோடியாக டாப்ஸி நடித்திருந்தார். அந்த 2011 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அடுத்த ஆண்டு பல தேசிய விருதுகளையும் வாங்கி குவித்தது.
இந்த நிலையில் ஆடுகளம் திரை பற்றி வெற்றிமாறன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில், ஆடுகளம் திரைப்படத்தில் இரவு நேரத்தில் ஜெயபாலன் தனது மனைவியுடன் உருக்கமாக பேசுவது போன்ற ஒரு காட்சியை இடம்பெற்று இருக்கும். அந்த சீன் பாலுமகேந்திரா சாருக்கு பிடிக்கும்னு தான் வச்சேன். பொல்லாதவன் படத்தில் அவருக்கு பிடிக்க பெருசா ஒன்னும் இல்ல. அதனால இந்த படத்துல அவருக்கு பிடிச்ச சீன் கட்டாயம் ஒன்னு வைக்கணும்னு அந்த சீன் வைத்திருந்தேன். அது பாலு மகேந்திரா சாருக்கு பிடிச்சிருச்சு. அந்த சீன் 2 நாள் நைட் ஷூட் பண்ணினோம்.
அந்த சீன் முடிச்சதுக்கு அப்புறம் ஜெயபாலன் சார் எங்க கூட வேலை பார்த்த அசீம் என்பவரை அதிகாலை 4 மணிக்கு போய் எழுப்பி, 65 வயசுல எனக்கு இருக்க அனுபவத்தை எப்படி அவன் 35 வயசுல இப்படி சொல்லிட்டானே என்ன பத்தி பேசி இருக்காரு. ஏனென்றால் ஜெயபாலன் சாருக்கும் அவருடைய மனைவிக்கும் கிட்டத்தட்ட 20 அல்லது 25 வயதை வித்தியாசம் இருக்கும். அவங்க மனைவி கிட்ட அவர் நிறைய ஃபீல் பண்ணி இருக்காரு. ஒரு நடிகரோட வாழ்க்கையையும் என் படத்துல ரியலா கொண்டு வரத நான் எப்பவுமே சிந்திப்பேன்
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ளது தவெக. வெறும் ஆட்சிக்கட்டிலில் ஏறுவதோடு…
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மாற்றுச் சான்றிதழ் வாங்குவது தொடர்பான தகராறில் 17 வயது…
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரை மாற்றுப் கட்சிக்கு இழுக்க பேரம் பேசி மிரட்டிய புகாரில், பிரபல யூடியூபரான ஐபிடிஎஸ்…
தர்மபுரியில் கடன் சுமை காரணமாக ரியல் எஸ்டேட் அதிபர் தனது மனைவி மற்றும் மகளைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தானும்…
2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில், நெதர்லாந்து அணிக்கு எதிரான விறுவிறுப்பான பெனால்டி ஷூட்-அவுட் சுற்றில் மொராக்கோ அணி…
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதுமணப் பெண்ணிற்கு நேர்ந்த பாலியல் தொல்லை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பு சம்பவம்…