நடிகர் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கினார். அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் சயன்ஸ்பிக்சன் கதையை வெங்கட்பிரபு இயக்குவதாகவும் அதை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பதாகவும் ஏற்கனவே முடிவாகி இருந்தது. ஆனால் சிவகார்த்திகேயன் கால்ஷீட் தராமல் வெங்கட்பிரபுவை வெயிட்டிங் லிஸ்ட்டில் போட்டு விட்டார்.
பராசக்தி படத்துக்கு பிறகு தாய்கிழவி பட இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் படத்தில் நடிக்க கமிட் ஆன அவர், அடுத்து பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் படத்தில் நடிக்கவும் முடிவு செய்துள்ளார். அதனால் வெங்கட்பிரபு படம் இனி டிராப் தான் என்கிற முடிவுக்கு வந்ததால் வெங்கட்பிரபு பயங்கர அப்செட் ஆனார்.
ஆனால் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை பொருத்த வரை அந்த படத்தை எடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். பட்ஜெட் மட்டும்தான் குறைக்க சொன்னோம். சிவகார்த்திகேயன் கதை ஓகே என்றால் நாங்கள் படத்தை எடுக்க தயார் என்று வெங்கட்பிரபுவிடம் கூறியிருக்கின்றனர். ஆனால் சிவகார்த்திகேயனிடம் இதுகுறித்து பச்சை சிக்னல் கிடைக்கவில்லை.
இந்த சூழலில் நடிகர் சிம்புவை நேரில் சந்தித்த இயக்குனர் வெங்கட்பிரபு, சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டிய இந்த சயின்ஸ்பிக்சன் கதையில் நீங்கள் நடியுங்கள். மாநாடு 2 என டைட்டில் வைத்துவிடலாம் என்று கூறியிருக்கிறார். மாநாடு படத்தின் கதை வேறு. அதன் தொடர்ச்சியாக இந்த கதையை எப்படி கொண்டு வரமுடியும்? இரண்டும் தொடர்பே இல்லை என்று சிம்பு மறுத்திருக்கிறார். அதனால் வெங்கட்பிரபு சயின்ஸ் பிக்சன் கதையை படமாக்குவது எஸ்கே கையில் மட்டுமே இப்போதைக்கு உள்ளது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…