நடிகர் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கினார். அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் சயன்ஸ்பிக்சன் கதையை வெங்கட்பிரபு இயக்குவதாகவும் அதை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பதாகவும் ஏற்கனவே முடிவாகி இருந்தது. ஆனால் சிவகார்த்திகேயன் கால்ஷீட் தராமல் வெங்கட்பிரபுவை வெயிட்டிங் லிஸ்ட்டில் போட்டு விட்டார்.
பராசக்தி படத்துக்கு பிறகு தாய்கிழவி பட இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் படத்தில் நடிக்க கமிட் ஆன அவர், அடுத்து பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் படத்தில் நடிக்கவும் முடிவு செய்துள்ளார். அதனால் வெங்கட்பிரபு படம் இனி டிராப் தான் என்கிற முடிவுக்கு வந்ததால் வெங்கட்பிரபு பயங்கர அப்செட் ஆனார்.
ஆனால் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை பொருத்த வரை அந்த படத்தை எடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். பட்ஜெட் மட்டும்தான் குறைக்க சொன்னோம். சிவகார்த்திகேயன் கதை ஓகே என்றால் நாங்கள் படத்தை எடுக்க தயார் என்று வெங்கட்பிரபுவிடம் கூறியிருக்கின்றனர். ஆனால் சிவகார்த்திகேயனிடம் இதுகுறித்து பச்சை சிக்னல் கிடைக்கவில்லை.
இந்த சூழலில் நடிகர் சிம்புவை நேரில் சந்தித்த இயக்குனர் வெங்கட்பிரபு, சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டிய இந்த சயின்ஸ்பிக்சன் கதையில் நீங்கள் நடியுங்கள். மாநாடு 2 என டைட்டில் வைத்துவிடலாம் என்று கூறியிருக்கிறார். மாநாடு படத்தின் கதை வேறு. அதன் தொடர்ச்சியாக இந்த கதையை எப்படி கொண்டு வரமுடியும்? இரண்டும் தொடர்பே இல்லை என்று சிம்பு மறுத்திருக்கிறார். அதனால் வெங்கட்பிரபு சயின்ஸ் பிக்சன் கதையை படமாக்குவது எஸ்கே கையில் மட்டுமே இப்போதைக்கு உள்ளது.
சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…
நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…
சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…
பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…