2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக மற்றும் பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதற்காக டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
மேலும் அதிமுக தரப்பில் பாஜகவிற்கு 25 இடங்கள், பாமகவிற்கு 18, அமமுகவிற்கு 7 மற்றும் தமாகாவிற்கு 3 இடங்கள் என மொத்தம் 53 இடங்களை ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், பாஜக தரப்பில் பாமகவைத் தவிர்த்து மற்ற கூட்டணிக் கட்சிகளுக்காகச் சேர்த்து 50 இடங்கள் வரை கோரப்படுவதால், இந்தப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.
இந்தச் சந்திப்பின் போது தொகுதிப் பங்கீடு மட்டுமின்றி, தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் வரும் அதிகாரிகள் இடமாற்றம் குறித்தும் எடப்பாடி பழனிசாமி ஆலோசிக்க உள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, திமுகவிற்கு ஆதரவாகச் செயல்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில் அதிகாரிகளின் பட்டியலை அமித் ஷாவிடம் வழங்கி, அவர்களைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டாம் எனக் கோரிக்கை வைக்க அவர் திட்டமிட்டுள்ளார். மார்ச் 6-ம் தேதிக்குள் தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தை இறுதி செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க அதிமுக தலைமை இலக்கு நிர்ணயித்துள்ளது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…