Actor Vijayakanth

இரவு 1.30 மணிக்கு கத்தியுடன் ரோட்டில் துரத்திய மர்ம நபர்… விஜயகாந்த செய்த தரமான சம்பவம் – நேரடியாக பார்த்த இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்!

By Elango on மாசி 17, 2026

Spread the love

கடந்த 1980களில் முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் எஸ்ஏ சந்திரசேகர். நடிகர் விஜயகாந்த் நடித்த பல படங்களை அவர் இயக்கியவர். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் கூறியதாவது, படத்துல மட்டும் இல்லே. நிஜத்தில் பத்து பேரை அடிப்பார் விஜயகாந்த். பிறந்தது மதுரை மண்ணுல. ஆள் பார்க்க நல்லா வாட்டசாட்டமா இருப்பார்.

கடந்த 1986ல் தி நகர் பனகல் பார்க் வழியாக நைட் 1:30 மணிக்கு ஷூட்டிங் முடிச்சுட்டு விஜயகாந்தும் நானும் காரில் போயிட்டு இருந்தோம். அப்போ ஒரு ஆள் கையில கத்தியோடு ஒருத்தனை துரத்திகிட்டு போறான். காரை நிறுத்தச் சொன்ன விஜயகாந்த் உடனே இறங்கி ஓடி அவனை துரத்தி பிடிச்சு அடிச்சு தி.நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைச்சார். அப்புறம்தான் நாங்க வீட்டுக்கு வந்தோம் என்று இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் கூறியிருக்கிறார்