கடந்த ஆண்டு வெளியான சூர்யாவின் கங்குவா திரைப்படம் சொதப்பலாக அமைந்த நிலையில் அடுத்ததாக வெளியாக உள்ள ரெட்ரோ மற்றும் சூர்யா 45 படங்களை அவர் அதிகமாக எதிர்பார்த்து உள்ளார். இந்த படங்கள் அவருக்கு சிறப்பாக கைகொடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஆர் ஜே பாலாஜி சூர்யாவின் 45 வது படத்தை இயக்கி வரும் நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்திலும் சூர்யா நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோசனை விரைவில் படக்குழுவினர் தொடங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ரொமான்டிக் மற்றும் ஆக்சன் ஜர்னரில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சூர்யாவிற்கு பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்துள்ளார். இந்த நிலையில் அடுத்ததாக ஆர்கே பாலாஜி இயக்கத்தின் சூர்யா 45 படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் படபிடிப்பு பொள்ளாச்சி உள்ளிட்ட சில இடங்களில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து இருக்கும் காமெடி நடிகர் கோதண்டம் தற்போது அளித்திருக்கும் பேட்டியில் சூர்யா45 ஷூட்டிங் ஸ்பாட்டில் RJ பாலாஜி கோபமாகி ஷூட்டிங்கை திடீரென ரத்து செய்துவிட்டதாக கூறி உள்ளார். அ
தாவது ஒரு நீதிமன்ற காட்சி எடுத்துக் கொண்டிருந்த ஆர் ஜே பாலாஜி அதற்காக ஆயிரம் பேர் கூட்டமாக நடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் படப்பிடித்து தொடங்கிய பிறகு அங்கு வெறும் 400 பேர் மட்டுமே இருந்திருக்கிறார்கள். அதனால் கோபமாக சூட்டிங் பேக்கப் என ஆர் ஜே பாலாஜி கூறியுள்ளார்.
ஒவ்வொரு காட்சியும் பர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என எந்த விஷயத்திலும் பாலாஜி சமரசம் அடைவதில்லை. ஒரு சேர் உடைந்து விட்டது அடுத்த டேக் எடுக்கும் போது வேறு சேர் போட்டால் அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார். அதேபோன்ற சேர் தான் வேண்டும் என கண்டிப்புடன் சொல்வார். அப்படி தான் படத்தை எடுத்து வருவதாக கோதண்டம் தெரிவித்துள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…