#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கருணாஸ். இவர் நடிகர் மட்டுமல்ல .ஒரு இசையமைப்பாளரும் கூட. அது மட்டும் இல்லாமல் இவர் தமிழக அரசியலிலும் களமிறங்கி கலக்கியவர். சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘நந்தா’ படத்தில் ‘லொடுக்கு பாண்டி’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் தான் கருணாஸ் சினிமா உலகில் அறிமுகமானார். இத்திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது .
அதன் பின்னர் விஜய், அஜித், தனுஷ் என பல முன்னணி நடிகர்களோடு நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரானார். இதைத் தொடர்ந்து வில்லன், புதிய கீதை ,திருமலை, குத்து, பிதாமகன், திருடா திருடி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். மேலும் திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, சாந்த மாமா போன்ற திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்பொழுது இவர் பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
#image_title
நடிப்பு மட்டுமில்லாமல் இவர் அரசியலிலும் இறங்கி சட்டசபை உறுப்பினர் ஆனார். முக்குலத்தோர் புலிப்படை என்ற கட்சியையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் தான் நடித்த கற்றது தமிழ் திரைப்படத்தால் தனக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து பேசியுள்ளார். கற்றது தமிழ் படத்தில் அவர் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்.
அந்த படம் உருவாகி ரிலீஸுக்கு சிக்கல் வந்த போது அந்த படத்தை வாங்கி அவர்தான் தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்துள்ளார். அதனால் கருனாஸுக்கு 2 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் ராம் அடுத்து இயக்கிய தங்க மீன்கள் படத்தில் முதலில் கருணாஸைதான் ஹீரோவாக நடிக்கவைக்க முடிவெடுத்துள்ளார் ராம்.
ஆனால் அப்போது அந்த படத்தைத் தயாரித்த கௌதம் மேனன் “இந்த படத்தில் நீங்களே ஹீரோவாக நடியுங்கள். அப்போதுதான் நான் இந்த படத்தைத் தயாரிப்பேன்” என சொன்னதால் வேறு வழியில்லாமல் இயக்குனர் ராமே அந்த படத்தில் கல்யாணி என்ற அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…