Categories: சினிமா

“பருத்திவீரன் சர்ச்சையில் சூர்யா சார் ஒரு லெட்டர் ரெடி பண்ணாரு… இந்த காரணத்துனாலதான் அது வெளிவரல”… பிரபலம் பகிர்ந்த தகவல்

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான மைல்கல் திரைப்படமாக கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியானது பருத்தி வீரன் திரைப்படம். இந்த படத்தில் அறிமுகமான கார்த்தி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கிறார். அந்த படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றனர், அந்த படத்தில் பணியாற்றிய அனைவரும்.

ஆனால் பட இந்த பட ரிலீஸூக்குப் பிறகு படத்தில் பணியாற்றிய கலைஞர்களாக அமீர், கார்த்தி மற்றும் ஞானவேல் ராஜா ஆகியோர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டது.  அதற்கு முக்கியக் காரணமாக இயக்குனர் அமீருக்கு தரவேண்டிய ஒரு கோடி ரூபாய்க்கு மேலான பணத்தை தராமல் ஞானவேல் ராஜா ஏமாற்றிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த விவகாரம் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் மிகப்பெரிய வைரலாக இருந்த விஷயம் பருத்திவீரன் தயாரிப்பு குறித்த விவகாரத்தில் அமீர் – ஞானவேல் ராஜா பிரச்னை தான். இந்த விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்பது குறித்து இயக்குநர் அமீர் ஒரு நேர்காணலில் வெளிப்படையாக பல விஷயங்களை கூறியிருக்கிறார்.

ஞானவேல் ராஜா அமீர் சரியாக கணக்கு காட்டவில்லை என்றும் பொய்க் கணக்கு எழுதினார் என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதையடுத்து அமீருக்கு ஆதரவாக பல இயக்குனர்களும், பருத்திவீரன் படத்தில் பணியாற்றியவர்களும் பேசினர். இதனால் சூர்யா தரப்பு மேல்தான் மொத்த தவறும் என்பது போல சமூகவலைதளங்களில் பேசப்பட்டது.

#image_title

இதுகுறித்து இப்போது இயக்குனர் பாண்டிராஜ் பகிர்ந்துள்ள தகவல் கவனம் பெற்றது. அவர் ஒரு நேர்காணலில் “அந்த பிரச்சனை நடந்த போது நான் சூர்யா சாருக்கு அழைத்து, ஏன் சார் நீங்கள் இது சம்மந்தமாக எந்த  விளக்கமும் கொடுக்கவில்லை என்றேன். அதற்கு அவர் “ஏன் சார் தேவையில்லாம, நாமும் அந்த கல்லை எடுத்து எறியவேண்டுமா? நான் அவர் மேல் மரியாதை வைத்திருக்கிறேன், அதைக் கெடுக்க வேண்டாமே?’ என்றார்.

நான் ‘அதெல்லாம் சரிதான் சார். ஆனால் வெளியில் இருந்து பார்க்கும்போது முழு தவறும் உங்கள் மேல் என்பது போல உள்ளது’ என்றேன். நாங்கள் சிலர் பேசி ஒரு அறிக்கை ஒன்றை தயார் செய்தோம். ஆனால் அப்போது விஜயகாந்த் சார் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தார். அப்போது வெளியிட்டால் சரியாக இருக்காது என்பதால் காத்திருந்தோம். பின்னர் சென்னை மழை வெள்ளப் பிரச்சனை வந்துவிட்டது. அதனால் அந்த லெட்டர் கடைசி வரை வெளியிடவே இல்லை. அது வந்திருந்தால் சூர்யா சார் பக்கம் இருக்கும் நியாயமும் தெரிந்திருக்கும். அவர்கள் பக்க நியாயம் ரொம்ப நியாயமாகவே இருந்தது” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

9 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

9 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

10 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

10 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

10 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

10 மணத்தியாலங்கள் ago