#image_title
நடிகர் அஜித்தின் செயலால் இயக்குனர் மகிழ் திருமேனி மிகப்பெரிய குழப்பத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிக்கும் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேலாக இந்த திரைப்படத்தை எடுத்த வருகிறார்கள். ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு மட்டும் முடிந்த பாடு இல்லை ஜவ்வு போல் இழுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
காரணம் லைக்கா நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால் இப்படத்தை தயாரிப்பதற்கான போதிய பணம் இல்லை என்று கூறினார்கள். ஒரு வழியாக எப்படியோ படத்தை முடித்து வருகிற தீபாவளிக்கு வெளியிட்டு விடலாம் என்று முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
இதற்கிடையில் நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகின்றார். இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கூட முடிவடைந்து விட்டது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கும் என்று கூறப்படுகின்றது. இதற்கு இடையில் தான் நடிகர் அஜித் விடாமுயற்சியின் இறுதி கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் என கூறப்பட்டு வந்தது.
ஏற்கனவே சம்பள பாக்கி காரணமாக லைக்கா ப்ரொடக்ஷனுக்கும் அஜித்துக்கும் இடையில் பிரச்சனை இருந்ததால் அதனை இருவரும் பேசி தீர்த்துக் கொண்டனர். இதைத்தொடர்ந்து நடிகர் அஜித் அஜர்பைஜான் செல்ல இருக்கிறார். அங்கு போய் இறுதி கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு வருகிற ஒன்றாம் தேதி மீண்டும் சென்னை வந்துவிட்டு பிறகு மீதி காட்சிகளில் நடித்த இருப்பதாக கூறப்படுகின்றது.
மேலும் இந்த படப்பிடிப்பில் சண்டை காட்சி ஒன்று மீதம் இருக்கின்றதாம். அதனை இயக்குனர் மகிழ்ந்திருமேனி அஜர்பைஜானில் தான் எடுக்க வேண்டும் என்று கூறுகிறார். ஆனால் நடிகர் அஜித்தை அதை மட்டும் சென்னையில் செட்டு போட்டு எடுத்துக் கொள்ளலாம் என்று சாதாரணமாக கூறிவிட்டாராம். இது மகிழ்ந்திருமேனிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
அவரோ எடுத்தால் அங்கு தான் எடுக்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கின்றார். ஆனால் அஜித் என்னால் அங்கு வாழ முடியாது. நீங்கள் எங்கு செட்டு போட்டு எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டாராம். இதனால் என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்தில் இருக்கின்றார் மகிழ்ந்திருமேனி. இதை கேள்விப்படும் ரசிகர்கள் ஒரு வழியாக எப்படியாவது படத்தை முடித்துவிட்டு ரிலீஸ் செய்ங்கபா என்று கூறி வருகிறார்கள்.
பிரபல சீரியல் நடிகையான ரட்சிதா மகாலட்சுமி குட்டை டவுசரில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது…
நடிகை பிரணிதா நீச்சல் குளத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பெங்களூருவை பூர்விகமா கொண்டவர் பிரணிதா.…
எங்களுடைய அப்பா எங்களை சினிமாவுக்குள் வர விட்டதே கிடையாது என்று கேஎஸ் ரவிக்குமாரின் மகள் மல்லிகா ஒரு பேட்டியில் கூறி…
நடிகை திரிஷாவுடன் சேர்ந்து அந்த சப்போட்டிங் கேரக்டரில் நடித்த பிறகுதான் தன்னுடைய சினிமா கேரியர் முடிந்து விட்டதாக நடிகை அர்ச்சனா…
முதல் மரியாதை படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். இதில் இடம்பெற்ற 8 பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. சிவாஜி கணேசனின் சினிமா…
நடிகை அர்த்திகா பிளாக் அண்ட் வொயிட் படத்தில் கார்த்திகேயன் இணைந்து நடித்தார். இந்நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம்…