சேது படம் மூலம் கடந்த 1999ம் ஆண்டில் சினிமாவில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தவர் பாலா. 25 ஆண்டுகளை நிறைவு செய்த பாலா இதுவரை ரசிகர்களுக்கு தந்தது 10க்கும் குறைவான படங்கள்தான். சேது நந்தா நான் கடவுள் பிதாமகன் அவன் இவன் பரதேசி தாரை தப்பட்டை வணங்கான் என கடந்த 25 ஆண்டுகளில் 8 படங்களை மட்டுமே அவர் ரசிகர்களுக்கு தந்திருக்கிறார்.
ஒவ்வொரு படத்துக்கும் இடையில் 2 அல்லது 3 ஆண்டுகள் என இடைவெளி விட்டு வருகிறார். இந்நிலையில் வணங்கான் படம் 2024ம் ஆண்டில் வெளியான நிலையில் இயக்குனர் பாலா தனது அடுத்த படத்துக்காக கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளார். திருவண்ணாமலையில் இந்த கதை விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்தில் இயக்குனர் மாரி செல்வராஜூம் பங்கேற்று உள்ளதாக தெரிய வருகிறது. இயக்குனர் பாலாவின் நெருங்கிய நண்பராக மாரி செல்வராஜ் மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
