#image_title
பிரபல இயக்குனரான மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. கடந்த 1999-ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மா நகரம் என்ற இடத்தில் வாழைத்தாரர்களை ஏற்றி சென்ற லாரி வயலில் கவிழ்ந்த விபத்தில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து மாரி செல்வராஜ் வாழை படத்தை இயக்கினார் இந்த படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த நிலையில் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த மாதிரி செல்வராஜ் கூறியதாவது, எனக்கு பிளாக் அண்ட் வொயிட் படம் மிகவும் பிடிக்கும். இன்னமும் பழைய நினைவுகள் ஞாபகம் இருக்கிறது நான் இப்போதுதான் புதிதாக வாழ்கிறேன் என கூறியுள்ளார்.
#image_title
மேலும் வாழை திரைப்படத்தில் மஞ்சள் பூசும், தூதுவளை அரைத்து என்ற பாடல் வைத்தது குறித்து மாரி செல்வராஜ் பேசினார். ஒரு பாடலில் ஆண் பெண் சேர்ந்து ஆடுவது காதல். ஒரு குரூப் டான்சில் ஆண்கள் மற்றும் பெண்கள் சேர்ந்து ஆடினால் அது கொண்டாட்டம். ஆனால் 50 ஆண்கள் முன்னிலையில் ஒரு பெண்ணை ஆட வைப்பது என்ன மனநிலை. அந்த பெண்ணை ஒரு போதை போல தமிழ் சினிமா காட்டுவது எவ்வளவு கொடுமையானது என பேசி இருந்தார்.
சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் நடிகை திரிஷா விஜயுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார். திரிஷா ஒரு பாடலுக்கு என்று நடனம் ஆடியது கிடையாது. ஆனால் விஜய்யுடன் இருக்கும் நட்பின் காரணமாக அந்த பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்த நிலையில் திரிஷா நடனம் ஆடியதையும் மாரி செல்வராஜ் பேசியதையும் நெட்டிசன்கள் ஒன்றாக பதிவிட்டு வருகின்றனர்
சாலை விபத்துகளில் சிக்குபவர்களைக் கட்சிப் பாகுபாடின்றி மீட்டு, அவர்களுக்குத் தகுந்த முதலுதவி அளித்து மருத்துவமனையில் அனுமதிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் முன்னாள்…
அதிமுகவின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்கால தேர்தல் வியூகங்கள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன், பெங்களூருவில் வெறும் 31 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க 2.5 மணி நேரம்…
சமூக அழுத்தங்களுக்காகவும், சடங்குகளுக்காகவும் மட்டுமே வாழும் இன்றைய சூழலில், ஒரு குழந்தை பிறப்பிற்குப் பின்னால் இருக்கும் பொறுப்பை உணர்ந்து நடிகை…
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதிதாகப் பதவியேற்றுள்ள தவெக அரசுக்கு நிர்வாகத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளக் கால…
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு எதிராக, அடுத்தடுத்து குதிரை பேரம்…