Connect with us

CINEMA

அஜித்துக்காக கதை எழுதி அப்ரோச் செய்த இயக்குனர் மகேந்திரன்… அவர் சொன்ன ஒரு வார்த்தை… நெகிழ்ச்சியான் சம்பவம்

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த போது அவருக்கு வெற்றி படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் வசந்த். அவர் இயக்கிய ஆசை திரைப்படம்தான் அஜித்தின் முதல் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது.

அதன் பிறகு காதல் மன்னன், வாலி, அமர்க்களம் மற்றும் முகவரி என அடுத்தடுத்து ஹிட் படங்களாகக் கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். ஆனால் அவரை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக்கியது முருகதாஸின் தீனா திரைப்படம்தான். அந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் ஆக்‌ஷன் பாதையில் அஜித் பயணப்பட்டார்.

   

அஜித்தின் சினிமா கேரியரில் அவர் சீனியர் இயக்குனர்களோடு பணியாற்றவே இல்லை என்பதுதான் ஒரு குறையாக உள்ளது. ஆனால் இயக்குனர் மகேந்திரன் அஜித்துக்காகக் கூடைப்பந்து வீரன் ஒருவரை கதாநாயகனாக வைத்து கதையெழுதி அவரிடம் சென்று சொன்னாராம். கதையைக் கேட்ட அஜித் “இந்த படத்தை நீங்களே தயாரியுங்கள். நான் உங்களுக்கு உதவி செய்கிறேன்” எனக் கூறினாராம்.

இதைக் கேட்டு நெகிழ்ந்து போயுள்ளார் மகேந்திரன். அப்போது அஜித்தின் மார்க்கெட் ஏறுமுகத்தில் இருந்தது. அவரை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்றார்கள். ஆனால் தனக்கு முன்பின் பழக்கமில்லாத தன்னை அந்த படத்தை தயாரிக்க சொன்ன அஜித்தின் குணம் மகேந்திரனை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. ஆனால் சில பல காரணங்களால் அந்த படம் தொடங்கப்படவே இல்லையாம்.

இந்த தகவலை இயக்குனர் மகேந்திரன் குமுதம் பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்ட ஒரு அஜித் பிறந்தநாள் சிறப்பு மலரில் தெரிவித்துள்ளார். அஜித் எப்போதுமே சீனியர்களுக்கு அதிக மரியாதைக் கொடுத்து அவர்கள் மனம் கோணாமல் நடந்து கொள்பவர். அவரின் இந்த குணத்துக்கு மகேந்திரன் சொன்ன சம்பவமே சான்று.

Continue Reading

More in CINEMA

To Top