தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் கௌதம் மேனன். இவர் தன்னுடைய ஒவ்வொரு படத்தையும் மக்கள் மத்தியில் வித்தியாசமாக காண்பிக்க கூடியவர். காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் படம் எல்லாம் சூர்யாவுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் படங்களாகும். அதனைப் போலவே கமல்ஹாசன், அஜித் மட்டும் தனுஷ் என்ன பலரையும் தன்னுடைய படங்களில் படு ஸ்டைல் ஆக கௌதம் மேனன் காட்டியிருப்பார். ஸ்டைலிஷ் ஆக மட்டுமல்லாமல் தன்னுடைய திரைக்கதை, வசனம் மற்றும் மேக்கிங் மூலம் அசரடிப்பார்.

இவர் இயக்கிய மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட காதல் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்னர். இப்படி பிசியாக இருந்தால் கௌதம் மேனன் இடையில் சில பிரச்சனைகள் வந்ததால் இயக்கத்தில் இருந்து ஒதுங்கினார். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வந்திருக்கும் அவர் சிம்புவை வைத்து இயக்கியிருந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் சூப்பர் ஹிட் கொடுத்தது. அடுத்தடுத்து இவர் இயக்கிய படங்களும் தயாரித்த படங்களும் தோல்வியை தழுவ கடனில் சிக்கினார்.

அதன் பின்னர் நடிகராக உருமாறிய கெளதம் மேனன் தற்போது மம்முட்டியை வைத்து டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் படத்தை இயக்கியுள்ளார். இப்படியான நிலையில் கௌதமேனன் சமீபத்தில் அளித்த பேட்டியில், விக்ரம் நடித்த இன்னும் வெளியாகாமல் இருக்கும் துருவ நட்சத்திரம் படமே ரஜினி சார் பண்ண வேண்டியதுதான். அவரிடம் முதல் பாதி கதையை நான் சொல்லி விட்டு வந்தேன். அவரும் நல்லா இருக்கு பண்ணலாம் என்று தான் சொன்னார்.

ஆனால் அதற்குள் சிலர் என்னைப் பற்றி அவரிடம் தவறாக போட்டுக் கொடுக்க அன்று மாலையே அந்த படத்தை அவர் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். நானும் சரி என்று எடுத்துக் கொண்டேன். அவர் சொன்ன வார்த்தையை சரியா பண்ணி முடிக்க மாட்டாரு படத்துக்கான கிளைமேக்ஸ் எழுதி முடிக்க மாட்டார் என்று என்னைப் பற்றி யாரோ தவறாக சொல்லி இருக்காங்க. ஆனா உண்மையிலேயே நான் அப்படி கிடையாது. சொன்ன பேச்சை கெளதம் கேட்க மாட்டார் என்பது பொய் தான் என கௌதமேனன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.
