Director Cheran

திரைப்பட விருதுகளில் பாரபட்சம் எதற்கு? எனக்கும் கேட்கும் உரிமை இருக்கிறது – இயக்குனர் சேரன் ஆவேசம்!

By Elango on மாசி 2, 2026

Spread the love

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் குறித்து இயக்குனர் சேரன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, பெண்களுக்கு இலவச பஸ் வறுமையில் இருக்கும் குடும்பங்களுக்கு உதவி தொகை திருமணத்திற்கு அரசு உதவி இதையெல்லாம் அரசு செய்கிறது. பெரும் பணம் இல்லாத குடும்பங்களில் கடன் படாமல் சிக்கனமாக எப்படி திருமணம் நடத்தப்பட வேண்டும், வாழ்க்கைக்கான சேமிப்பாக எப்படி அதை மாற்றலாம் என்ற கருத்தோடு விளிம்புநிலை மக்களுக்கான படமாக உருவாக்கப்பட்ட படம் திருமணம்.

திருமணம் திரைப்படம் தேர்வுக்குழுவினரால் கண்டுகொள்ளப்படாமல் போனது அவர்களின் நுண்ணிய பார்வையற்ற தன்மையை அல்லது தங்களை சார்ந்துள்ளவர்களுக்கு மட்டுமே விருது கொடுக்கும் தன்மையை காட்டுகிறது. அரசுக்கு வரிகட்டி வாக்களித்து நாங்களும் இந்த சமூகத்தின் வாக்காளர்கள் என்ற உரிமையில் எனக்கு கேட்கும் உரிமை இருக்கிறது.

   

இனி எவருக்கும் இது போல் நடக்கக்கூடாது. நேர்மையான முறையில் பாரபட்சமின்றி யாரும் ஒதுக்கப்படாமல் விருதுகள் சென்றடைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அரசுகள் மாறலாம் அரசின் நிலைப்பாடு என்றும் பாரபட்சமாக இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்துகிறேன் என்று அந்த பதிவில் இயக்குனர் சேரன் கூறியிருக்கிறார்.