சமீபத்தில் நடிகர் ஆரி அர்ஜூனன் நடித்த போர்த் ஃப்ளோர் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் பேசியதாவது, குடும்பத்திலிருந்து பணத்தை எடுத்து சினிமா தாகத்தில் இங்கு கொண்டு வந்து போடுகிற பணத்தை மீட்டு எடுப்பதற்கு தயாரிப்பாளர்களுக்கு வழி இருக்கிறதா என்றால் இல்லை. மனசாட்சியை அடகு வைத்துக்கொண்டு தயாரிப்பாளரை தெரிந்தே குழிக்குள் தள்ளுகிறோமா என்றால் ஆமாம். எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது நம்ம ஊரில் டப்பிங் படங்கள் நிறைய வந்து கொண்டிருந்தது. அப்போது தமிழ் படங்கள் காணாமல் போகிற சூழல் உருவானது. எல்லோரும் ஜாக்கி சான் தமிழ் பேசுவதை ரசித்துப் பார்க்க தொடங்கினோம். எம் ஜி ஆர் அப்போது என்ன பண்ணினார் என்றால் ஒரு ஆர்டர் போட்டார்.
அதில், எந்த திரையரங்கம் என்றாலும் கண்டிப்பாக 90 நாட்கள் தமிழ் படங்கள் போட வேண்டும். அப்படி போடவில்லை என்றால் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என்றார். அதுபோல் இன்று சிறிய படங்களுக்கு 3 மாதங்கள் ஒதுக்கி கொடுங்கள். அது எந்த 3 மாதம் என்றாலும் பரவாயில்லை. 9 மாதங்கள் பெரிய படங்கள் போட்டுக் கொள்ளுங்கள். சிறிய படங்கள் வெளியான நேரத்தில் பெரிய படங்கள் வரக்கூடாது. 3 மாதத்தில் 72 சிறிய படங்கள் ரிலீஸ் ஆகும். தயாரிப்பாளர்கள் வாழ்வார்கள். இதை அனைவரும் சேர்ந்து அரசிடம் தயக்கமில்லாமல் முறையிட வேண்டும் என்று இயக்குனர் சேரன் அந்த விழாவில் பேசியிருக்கிறார்.
தமிழக அரசியலில் தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்துக்கொண்டே, இடைத்தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் முடிவு…
ஹைதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலமாகுலா எல்லைப் பகுதியில், விநாயகர் சிலை விசர்ஜன விழாவை முடித்துவிட்டு மெட்டுகட்டா தண்டாவிலிருந்து ஷம்ஷாபாத் நோக்கிச்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்யின் பொதுநிகழ்வுகள் மற்றும் தனிப்பட்ட வருகைகள் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன்…
கிரேட்டர் நொய்டாவில் உள்ள இகோ வில்லேஜ் 2 குடியிருப்பு வளாகத்தில், நவீன் பஸ்வான் என்ற வாடகைதாரர் தனது காரை பார்க்கிங்…
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில், கட்டுமான தள மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்த 40 வயது நபர் ஒருவர், கடுமையான நிதி…
தலைநகர் டெல்லியின் திக்ரி பகுதியில், வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் வீட்டில் சமைப்பது தொடர்பாகக் கணவன் கமலேஷிற்கும், அவரது 31 வயதான…