#image_title
தமிழ் சினிமாவில் தன்னுடைய கதைகளில் ரௌத்திரத்தை ஏற்றி பார்வையாளர்களை திகைத்துப் போக வைக்கும் படங்களை எடுத்தவர் இயக்குனர் பாலா. அவர் இயக்கிய சேது, பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்கள் அவற்றின் உருவாக்கத்தால் இன்றளவும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கின்றன.
அவர் படங்களில் நடித்த பின்னர்தான் விக்ரம், சூர்யா மற்றும் ஆர்யா ஆகியோர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்தனர். அதனால் அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதில் பல இளம் ஹீரோக்கள் ஆர்வமாக இருந்தார்கள். அவர் படங்களில் கதாநாயகர்கள் பெரிய அளவுக்கு உயர்ந்தாலும், கதாநாயகிகள் போன இடம் தெரியாமல் காணாமல் போனார்கள்.
தமிழ் சினிமாவில் சேது, நந்தா மற்றும் பிதாமகன் என அடுத்தடுத்து தனது முத்திரைப் படங்களால் தன்னை வெளிக்காட்டியவர் இயக்குனர் பாலா. இந்த படங்களுக்குப் பிறகு அவர் தனுஷை வைத்து ‘அகங்காரம்’ என்ற படத்தை இயக்கவிருந்தார். அந்த படம் அவரின் பயோபிக் படமாகதான் உருவாக இருந்தது. ஆனால் அந்த படம் கைவிடப்பட்டது.
Director bala in avan ivan movie
சமீபகாலமாக அவரது படங்கள் தோல்விகளை சந்தித்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் அவர் இயக்கிய வர்மா திரைப்படம் கிடப்பில் போடப்பட்டு வேறொரு இயக்குனரை வைத்து மீண்டும் எடுக்கப்பட்டது. அவர் சூர்யாவை வைத்து இயக்கிய வணங்கான் படத்தில் இருந்து சூர்யா வெளியேறினார். இப்போது அருண் விஜய்யை வைத்து அதே கதையை இயக்கி வருகிறார். விரைவில் அந்த படம் ரிலீஸாகவுள்ளது.
நடிகர்களிடம் அவர்களின் உச்சபட்ச நடிப்பை வாங்கும் பாலா, இரண்டு படங்களில் நடித்துள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் அவர் சந்தியா ராகம் மற்றும் அவன் இவன் ஆகிய இருபடங்களில் நடித்துள்ளார். பாலு மகேந்திரா இயக்கிய சந்தியா ராகம் படத்தில் பாலா உதவி இயக்குனர். அதில் வரும் ஒரு சிறு தபால்காரர் வேடத்தில் பாலா நடித்திருப்பார். அதே போல தான் இயக்கிய அவன் இவன் படத்தில் பாலா ஒரு ஆட்டோ டிரைவராக ஒரு காட்சியில் நடித்திருப்பார்.
குடும்பத் தகராறும் சந்தேகமும்திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கணபதி நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபாகரன் என்பவருக்கும், ரூபி…
இணையதளமும் சமூக வலைத்தளங்களும் நன்மைகளுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தைத் தாண்டி, சில சமயங்களில் குற்றச் செயல்களுக்குத் தூண்டுகோலாக மாறுவது…
அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி அரசியல் திருப்பங்கள் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே எஸ்பி வேலுமணி,…
தமிழக முதலமைச்சர் விஜய், தங்களுக்கு ஆதரவளிக்குமாறு குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறிய குற்றச்சாட்டு, மாநில அரசியலில்…
அதிமுகவில் உட்கட்சிப் பூசல்களும் நிர்வாகிகளின் அதிருப்தியும் மீண்டும் வெடித்துள்ள நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் 9 பேர் இணைந்து பொதுச்செயலாளர்…
தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரை விலைக்கு வாங்கப் பேரம் பேசப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்…