Categories: சினிமா

பிதாமகன் படத்துக்கு முன்பே விக்ரம், சூர்யாவை இணைத்து படமெடுக்க முயன்ற அமீர்… எந்த படம் தெரியுமா?

Spread the love

பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்து சூப்பர் ஹிட்டான சேது திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க முதலில் முரளிதான் ஒப்பந்தம் ஆனாராம். அப்போது அவர் பிஸியான நடிகராக இருந்தும் அந்த படத்துக்காக மொட்டை அடிக்க துணிச்சலாக சம்மதித்தாராம். ஆனால் அது நடக்காததால் அதன் பின்னர் விக்ரம்மை வைத்து சேது படத்தை எடுத்து பல போராட்டங்களுக்குப் பிறகு படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அந்த படம் ரிலீஸானதும் விக்ரம் மிகப்பெரிய நடிகர் ஆனார். அந்த ஒரு படத்தின் வெற்றி, அவரை 100க்கும் மேற்பட்ட கதைகளைக் கேட்கவைத்தது. அப்போது அவர் தனக்காக கதை கேட்க சேது படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய இயக்குனர் அமீரை தன்னிடம் வைத்துக் கொண்டு கதைக் கேட்டாராம்.

அதுபற்றி இப்போது பேசியுள்ள இயக்குனர் அமீர், “அப்போது 100க்கும் மேற்பட்ட கதை விக்ரம்முக்கு வந்தது. பாக்யராஜ் சாரெல்லாம் வந்து கதை சொன்னார். கௌதம் மேனன் காக்க காக்க படத்தின் கதையை வந்து சொன்னார். அவர் ஆங்கிலத்திலேயே சொன்னதால் எனக்குக் கதை புரியவில்லை.

அப்போது நானே ஒரு படம் பண்ண விக்ரம்முக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தேன். ஆனால் மீண்டும் ஒரு அறிமுக இயக்குனரிடம் தன்னை ஒப்படைக்க அவர் விரும்பவில்லை. அப்போது நான் மௌனம் பேசியதே கதையை அவரை வைத்து டிசைன் செய்திருந்தேன். அதில் கௌதம் கதாபாத்திரத்தில் விக்ரம்மும்,  கண்ணன் கதாபாத்திரத்தில் சூர்யாவும் நடிப்பது போல டிசைன் செய்திருந்தேன்.

அதைப் பார்த்து சிவகுமார் சாரில் இருந்து விக்ரம் வரை அனைவருமே ரசித்தார்கள். ஆனால் நாளாக நாளாக எனக்கு விக்ரம் நமக்குப் படம் பண்ணமாட்டார் என்பது தெரிந்தது. அதனால் அவரிடம் கொடுத்த அட்வான்ஸை வாங்கிவிட்டேன். அதன்பின்னர்தான் சூர்யா மற்றும் நந்தா ஆகியோரை வைத்து  எடுத்தேன்” எனக் கூறியுள்ளார். அதன் பிறகு சூர்யாவும் விக்ரம்மும் இணைந்து பிதாமகன் படத்தில் நடித்தனர் என்பது குறிப்பிடத்தகக்து.

vinoth

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

9 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

9 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

10 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

10 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

10 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

10 மணத்தியாலங்கள் ago