Categories: சினிமா

பருத்திவீரன் பிரச்னையில் 17 வருடம் கழித்து எனக்கு நீதி கிடைத்தது.. சூர்யாவிடம் நேரில் பேசியது இதுதான்.. மனம் திறந்து பேசிய அமீர்..

Spread the love

கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் மிகப்பெரிய வைரலாக இருந்த விஷயம் பருத்திவீரன் தயாரிப்பு குறித்த விவகாரத்தில் அமீர் – ஞானவேல் ராஜா பிரச்னை தான். இந்த விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்பது குறித்து இயக்குநர் அமீர் ஒரு நேர்காணலில் வெளிப்படையாக பல விஷயங்களை கூறியிருக்கிறார்.

அதில் அமீர் கூறியதாவது, பருத்திவீரன் படம் தயாரிப்பு குறித்து கோர்ட்டில் வழக்கு நடக்கிற விஷயத்தை அதுவரை நான் வெளியில் யாரிடமும் சொல்லவில்லை. சொல்லவும் விரும்பியது இல்லை. மாயவலை படம் குறித்த பிரமோ நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, கார்த்தி 25 விழாவில், நீங்கள் ஏன் கலந்துக்கொள்ளவில்லை என கேட்ட போது, அவர்களுக்கும் எனக்கும் பிரச்னை இருப்பதை சுட்டிக்காட்ட வேண்டிய கட்டாயத்தால், 17 ஆண்டுகளாக பருத்திவீரன் படம் தயாரிப்பு பிரச்னையில் வழக்கு நடப்பதை சொல்ல நேரிட்டது.

இதற்கு பதிலளித்த தயாரிப்பாளர், அமீர் சரியாக கணக்கு காட்டவில்லை. அதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் பேசிய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டாததால், கோர்ட் வழக்கு நடக்கிறது என்று கூறியிருந்தால், அதன்பிறகு இதைப்பற்றி யாருமே பேசியிருக்க மாட்டார்கள்.

ஆனால் அவர் தேவையின்றி என்னை பற்றி இழிவாகவும், அவதூறாகவும் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. அதற்கு பதிலாக, என் மீது அன்பு கொண்ட கலைத்துறை நண்பர்கள் அவருக்கு பதில் சொன்னதால் பிரச்னை இன்னும் பெரியதாகி விட்டது. இல்லை என்றால் இந்த விவகாரம் வெளியே வந்திருக்காது.

ஆனால் பருத்திவீரன் படம் தயாரிப்பு விஷயத்தில் மக்கள் தரப்பில் இருந்து எனக்கு நீதி கிடைத்து விட்டது. மக்கள் என் தரப்பில் இருந்த உண்மையை ஏற்றுக்கொண்டார்கள். நான் சொன்ன விஷயங்களில் இருந்து அவர்கள் உண்மையை புரிந்துக்கொண்டு என் பக்கமாக நின்றார்கள். எனக்கு அதுவே போதும்.

நீதிமன்ற தீர்ப்பு வரும்போது வரட்டும். அதில் எப்படிப்பட்ட முடிவாக இருந்தாலும், அதை ஏற்றுக்கொள்ளவே போகிறேன். ஆனால் அதற்கு முன் மக்களும், கலையுலகம் சார்ந்த என் நண்பர்களும் எனக்கு பக்கபலமாக, ஆறுதலாக இருந்ததே பெரிய சந்தோஷத்தை எனக்கு தந்துவிட்டது.

நானும் சூர்யாவும் பலமுறை சந்தித்த நிலையிலும், ஒருமுறை கூட பருத்திவீரன் படம் தயாரிப்பு பிரச்னை குறித்து நானும் பேசியது இல்லை. அவரும் பேசியது இல்லை. சமீபத்தில் கலைஞர் 100 விழாவில் கலந்துக் கொண்ட போதும் என்னை பார்த்தவுடன் அருகில் வந்தார். நலம் விசாரித்தார். கட்டியணைத்தார். எங்களுக்குள் இருக்கிற அந்த நட்பில் எந்தவிதமான முரண்பாடும் இல்லை.

இன்னும் பருத்தி வீரன் விவகாரத்தில் நிறைய கதைகள் உள்ளது. ஆனால் அதை எல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இவர்களே ஏதேனும் பிரச்னையை கிளப்பி என்னை சொல்ல வைப்பார்கள். ஏனெனில் இந்த முறை நடந்ததே அதுதான். அவர்கள் பிரச்னையை பேசாவிட்டால், நான் வெளியே இதை பேசியே இருக்க மாட்டேன், என்றும் கூறியிருக்கிறார் இயக்குநர் அமீர்.

admin

Recent Posts

மத்திய கிழக்கு போர் எதிரொலி.. “பெட்ரோலுக்கு மட்டும் இல்லை இனி சாப்பாடுக்கும் தட்டுப்பாடு”… ஸ்தம்பிக்கப் போகும் விவசாயம்… உலக வங்கி நிபுணர் இந்தர்மிட் கில்லின் எச்சரிக்கை…!!!!

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்கள் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக உலக வங்கியின் தலைமை…

10 minutes ago

“பிள்ளையைக் கிள்ளி விட்டு.. தொட்டிலை ஆட்டும் ட்ரம்ப்”…. அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த ‘செங்கடல்’ எச்சரிக்கை… அடுத்த சில நாட்களில் நடக்கப்போவது இதுதான்…!

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு உலகளாவிய பொருளாதாரத்திற்கு…

11 minutes ago

வார்த்தை கூறி 180 சிறுமிகளை சீரழித்த காம கொடூரன்… 350 ஆபாச வீடியோக்கள்… ‘ஸ்னாப்சாட்’ சைக்கோ சிக்கியது எப்படி?… மகாராஷ்டிராவை உலுக்கிய கொடூர சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற வாலிபர், வாட்ஸ் அப் மற்றும் ஸ்னாப்சாட்…

16 minutes ago

“30,000 கோடி ஆடியோ விவகாரம்”… ஸ்டாலினுக்கு குஷ்பு விடுத்த பகிரங்க சவால்… திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி…!

தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…

23 minutes ago

சீனா கொடுத்த ‘பிக்பாட்’ ட்விஸ்ட்!… ஜி ஜின்பிங் சொன்ன ‘அந்த ஒரு வார்த்தை’… ஈரானுக்கு டிரம்ப் வைத்த செக்… அதிர்ந்து போன உலக நாடுகள்…!!

பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…

28 minutes ago

மூச்சுத் திணறும் உலகப் பொருளாதாரம்… வெறும் 21 மைல் கடற்பரப்பால் அழியப்போகும் வல்லரசு நாடுகளின் கனவு!… இந்தியாவை நிலைகுலையச் செய்யும் அமெரிக்காவின் இந்த ஒரு முடிவு…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தால் உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ளது.…

31 minutes ago