“உன்ன துண்டு துண்டாக வெட்டி, கண்ண நோண்டி, நரம்பை இழுத்து கொல்லனும்”… இளைஞர் ஆணவ கொலையில் வெளியான திடுக்கிடும் ஆடியோ… கொடூரத்தின் உச்சம்…!

Spread the love

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதி அருகே உள்ள ராமநாயக்கன்பட்டியை சேர்ந்த செல்வம் என்பவருடைய மகன் ராமச்சந்திரன் (24). இவர் பால் கறவை தொழில் செய்து வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவருடைய மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த ஐந்து மாதங்களாக இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தனர்.

இதனிடையே நேற்று முன்தினம் அதிகாலை பால் கறவைக்குச் சென்ற ராமச்சந்திரனை அவருடைய மனைவி ஆர்த்தியின் தந்தை சந்திரன் வழிமறித்து வெட்டி கொலை செய்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்திரனை கைது செய்துள்ளனர். இதனிடையே கொலை செய்யப்பட்ட ராமச்சந்திரனின் மனைவி ஆர்த்தி தனது காதல் கணவனை தனது தந்தை மற்றும் சகோதரர்கள் சேர்ந்து தான் கொலை செய்தார்கள் என்று புகார் தெரிவித்து அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மருத்துவமனை அருகே போராட்டம் நடத்தினார்.

இந்நிலையில் இன்று காலை ஆர்த்திக்கு தெரியாமல் அவரது இறந்த கணவரின் உடலை கணவரின் பெற்றோர் போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்வதற்கு கொண்டு சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த காதல் மனைவி ஆர்த்தி தன்னுடைய கணவனின் உடலை எனக்கு தெரியாமல் எப்படி கொண்டு சென்றீர்கள் என்று வாக்குவாதம் செய்து மருத்துவமனை வளாகத்தில் மீண்டும் அமர்ந்து போராட்டம் நடத்தினார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் பெண்ணின் உறவினர்கள் அவரை சமாதானம் செய்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டார்.

இந்நிலையில் ராமச்சந்திரன் கொலை செய்யப்பட்டதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பெண்ணின் சகோதரர் ரிவீன் என்பவர் ராமச்சந்திரனை கொலை செய்வதாக மிரட்டி அனுப்பிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில், நீ நரக வேதனையை அனுபவிப்ப, என் குடும்பத்தை அசிங்கப்படுத்திட்டு போன உன் அப்படியே விட்டா நான் பொட்ட, உன்னை துண்டு துண்ட அறுத்து கண்ணை நோண்டி நரம்பை இழுத்து பயங்கரமா கொலை பண்ணுவேன் என்று கொடூரத்தின் உச்சத்தில் பேசியுள்ளார். எனவே ஆர்த்தி தன்னுடைய தந்தை மட்டுமல்லாமல் அண்ணன் மற்றும் அம்மா என குடும்பமே சேர்ந்து தான் கொலை செய்துள்ளது என்று கூறி அவர்களை கைது செய்ய வேண்டும் என போலீசில் புகார் அளித்துள்ளார்

Nanthini

Recent Posts

“தகுதி நீக்கப் பட்டியலில் 25 எம்.எல்.ஏ-க்கள்?” – அதிர வைக்கும் ரவிக்குமாரின் அறிக்கை… தமிழக அரசியலில் திடீர் திருப்பம்…!

தமிழகத்தில் தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுக-வின் 25 எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்த விவகாரம், தற்போது ஒரு சிக்கலான சட்டப் போராட்டமாக மாறியுள்ளது.…

1 minute ago

விஜய் கொடுத்த ஆஃபர்…. திருமாவுக்கு காத்திருக்கும் அமைச்சர் பதவி?… ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்… தமிழக அரசியலை அதிரவைக்கும் புதுக் கூட்டணி கணக்கு…!

தமிழக அரசியலில் 'ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு' என்ற கோஷத்தை முன்வைத்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தற்போது ஒரு…

7 minutes ago

“இனிமே நாங்க தான்.. அதிமுகவில் அடித்துக் கொள்ளும் தலைகள்”… சத்தமில்லாமல் களம் இறங்கும் சசிகலா… அடுத்த 24 மணிநேரத்தில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்….!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சந்தித்த பின்னடைவைத் தொடர்ந்து, அக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில்…

14 minutes ago

“36% கமிஷன் புகாரும்.. அதிரப்போகும் கோட்டையும்”… திமுகவை பகிரங்கமாக தாக்கிய காங்கிரஸ் எம்பி… தமிழக அரசியலில் திடீர் திருப்பம்….!

தமிழக அரசியலில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் நிகழ்ந்துள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகத்தின்…

20 minutes ago

CM விஜய் இபிஎஸ்-ஐ மட்டும் ஏன் பார்க்கல?… ஓப்பனாக பேசிய சி.டி.ஆர் நிர்மல் குமார்… அரசியலில் அடுத்த ட்விஸ்ட்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது அரசியல் பயணத்தின் தொடக்கமாகப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து வரும்…

26 minutes ago

“கைகட்டி நிற்கும் அதிகாரிகள்.. ஒரு FILE கூட மூவ் ஆகல”…. மொத்தமாக முடங்கிய சென்னையின் 3000 கோடி ப்ராஜக்ட்… விஜய்க்கு காத்திருக்கும் அடுத்த சிக்கல்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய அரசு பொறுப்பேற்று ஒரு வாரத்திற்கு மேலாகியும், அமைச்சர்களுக்கான இலாகாக்கள் இன்னும் ஒதுக்கீடு…

30 minutes ago