தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கர்நாடகாவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது அவரே காரைச் சுயதொழில்நுட்பத்தோடு ஓட்டி வந்த புகைப்படம் இணையத்தில் பெரும் வைரலானது. எந்தவொரு மாநில முதலமைச்சரும் இதுபோன்று நீண்ட தூரம் காரை ஓட்டிச் சென்றதில்லை என்ற பெருமையுடன் இப்பதிவு பரவிய நிலையில், ஒரு கும்பல் திட்டமிட்டு அதில் வதந்தியைப் பரப்பியது. காரின் ஹேண்ட் பிரேக் பகுதிக்கு அருகில் இருக்கும் கப் ஹோல்டரில் ஒரு யூஸ் அண்ட் த்ரோ கிளாஸில் மது இருப்பது போல புகைப்படத்தை எடிட் செய்து, அவர் மது அருந்திக்கொண்டே கார் ஓட்டினார் என்று சமூக ஊடகங்களில் வதந்தியைப் கிளப்பினர்.
இந்த அவதூறு குறித்துப் பிரபல பத்திரிகையாளர் வி.கே. சுந்தர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிக விளக்கமானப் பதிவு ஒன்றை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அந்தப் பதிவில், வதந்திகளைப் பரப்பும் “போட்டோஷாப் குரூப்”-களுக்கு உயர் ரக சொகுசு கார்களில் கப் ஹோல்டர்கள் மற்றும் பாட்டில் ஹோல்டர்கள் எங்கு அமைக்கப்பட்டிருக்கும் என்ற அடிப்படைக் கட்டமைப்பு கூடத் தெரியவில்லை என்று அவர் சாடியுள்ளார். மேலும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே முதலமைச்சரின் லாங் டிரைவ் புகைப்படத்தை எடிட் செய்து இத்தகைய போலிப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் தனிப்பட்ட ஒழுக்கம் மற்றும் பழக்கவழக்கங்கள் குறித்தும் பத்திரிகையாளர் வி.கே. சுந்தர் தனது பதிவில் ஒரு முக்கியப் பகிர்வை முன்வைத்துள்ளார். விஜய் நடித்த ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, இயக்குனர் எவ்வளவோ வற்புறுத்தியும், “எனக்கு ட்ரிங்க்ஸ் அடிக்கும் பழக்கம் இல்லை சுந்தர்” என்று கூறி விஜய் தனக்குக் கொடுக்கப்பட்ட பியரைக் கூடத் தொட மறுத்துவிட்டார் என்ற உண்மைச் சம்பவத்தை அவர் நினைவு கூர்ந்துள்ளார். இதன் மூலம், மதுப்பழக்கமே இல்லாத ஒருவரைப் பற்றி இணையத்தில் பரப்பப்படும் இத்தகைய புகைப்படங்கள் முற்றிலும் ஜோடிக்கப்பட்டவை மற்றும் போலியானவை என்பதை அவர் திட்டவட்டமாக நிரூபித்துள்ளார்.
