அதிமுகவுடன் கூட்டணி இல்லை… சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்….!

By Nanthini on கார்த்திகை 10, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் நான்கு முனை போட்டியாக உள்ளது. அதாவது திமுக, அதிமுக, தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப்போட்டி நிலவி வருகிறது. இதில் தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக எப்படியும் தங்கள் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது.

மறுபக்கம் சீமான் யாருடனும் கூட்டணி வைக்காமல் தன்னந்தனி ஆளாக கட்சியை வழிநடத்தி வருகிறார். அதேசமயம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் அதிமுக ஆட்சியை நிலை நாட்டுவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறார். இவர்களுக்கு நடுவே விஜயும் களத்தில் இறங்கி உள்ளதால் விஜயை தங்கள் கூட்டணியில் இழுக்கும் முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

   

இந்நிலையில் அதிமுக தலைமை வகிக்கும் NDA கூட்டணியில் மீண்டும் இணைய போவதில்லை என டிடிவி தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரோட்டில் கடை போட்டு கூவி கூவி அழைப்பது போல கூட்டணிக்கு அழைக்கும் நிலையில் இ பி எஸ் உள்ளதாக சாடினார். மேலும் விஜயை கூட்டணிக்கு வரவில்லை என்றால் கட்சி அழிந்துவிடும் என சிலர் மிரட்டும் தோனியில் பேசுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.