நடிகர் தனுஷின் 50-வது திரைப்படமான ராயன் படத்தின் ட்விட்டர் விமர்சனம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது தன்னுடைய 50-வது திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படத்தை தானே இயக்கிய நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் தனுஷ் உடன் சேர்ந்து எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிருஷ்ணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.

#image_title
இந்த படத்தின் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்திருந்தார் நடிகர் தனுஷ். இந்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தினை அதிகாலை 6:00 மணிக்கு திரையிடப்பட்ட சிறப்பு காட்சியை பார்ப்பதற்கு ரசிகர்கள் காலை முதலே திரையரங்குகளில் குவிந்திருந்தார்கள்.
இப்படத்தின் கதை என்னவென்றால் மூன்று சகோதரர்கள் சிறுவயதிலிருந்து பெற்றோர் இல்லாமல் தவித்து வருகிறார்கள். இவரின் குடும்பத்திற்கு ஒரு பிரச்சனை வருகின்றது. இதனை எதிர்த்து நின்று போராடி தனது குடும்பத்தை காப்பாற்றுகின்றார் தனுஷ். இதுதான் இப்படத்தின் கதை என்று கூறப்படுகின்றது.
#Raayan – ARR Bhai is the second hero of the movie🥶🫶
Sema BGM🤌🔥🔥 pic.twitter.com/5RJGWVBmJ4— AmuthaBharathi (@CinemaWithAB) July 26, 2024
படத்தை பார்த்த ரசிகர்களில் பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தனுஷ் ஒரு இயக்குனராக அண்ணன் செல்வகராகவன் மாதிரி படம் எடுப்பார் என்று நினைத்து தியேட்டருக்கு போனால் அவரின் குருவான வெற்றிமாறன் போல் படத்தை எடுத்து வைத்திருக்கின்றார். முதல் பாதி வெறித்தனமாக இருக்கின்றது. கிளைமாக்ஸ் காட்சிகள் வெறித்தனத்தின் உச்சம்.
https://twitter.com/B_botHere/status/1816667516267377028
ஏ ஆர் ரகுமானின் இசை இப்படத்திற்கு மிகப்பெரிய பலம். எஸ்ஜே சூர்யா-வின் நடிப்பு மிரட்டல் ஆக மொத்தம் இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் என்று பலரும் தங்களது கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள். ஆரம்பத்திலேயே படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருவதால் கட்டாயம் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் நடிகர் தனுஷ் வெற்றிமாறனை பின்பற்றி அப்படியே படத்தை எடுத்து வைத்திருப்பதாக தான் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.