#image_title
நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷ் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த பல மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். லிங்கா, யாத்ரா இருவரும் அம்மா வீட்டிலும், அப்பா வீட்டிலும் மாறி மாறி இருந்து வருகின்றனர். குறிப்பாக தாத்தா ரஜினிகாந்துடன் அதிக நேரத்தை செலவளிக்கின்றனர். இந்நிலையில், தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் பிரிந்து பல மாதங்களாகியும் இன்னும் இருவர் தரப்பிலும் விவகாரத்து கேட்டு கோர்ட்டுக்கு இதுவரை போகவில்லை.
#image_title
இதற்கு முக்கிய காரணம் நடிகர் ரஜினிகாந்த் தான். காரணம், ஏற்கனவே தனது மகளும், மருமகனும் பிரிந்து வாழ்வதை ரஜினிகாந்த் ஏற்றுக்கொள்ளவில்லை. இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு சென்றால் இன்னும் ரஜினி மனதளவில் அதிக வேதனைப்படுவார் என ஐஸ்வர்யா கருதுகிறார். அதுமட்டுமின்றி தனுஷ், தன் மாமனார் ரஜினிகாந்த் மீது மிகுந்த மரியாதை, மதிப்பு வைத்துள்ளார். தனுஷ் கடன் பிரச்னையில் இருந்த போது, காலா படத்தில் தனுஷை தயாரிப்பாளராக்கி, தன் சம்பளத்தில் பாதியை விட்டுக்கொடுத்தார் ரஜினி. இதனால் பெரிய கடன் பிரச்னைகளில் இருந்து தனுஷ் தப்பித்திருக்கிறார்.
#image_title
அதுமட்டுமின்றி ரஜினி மருமகன் என்ற நிலையில் இருக்கும் அவர், ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்தால், ரஜினி ரசிகர்களின் கோபத்தை, வெறுப்பை சம்பாதிக்க வேண்டிய நிலை வரும். தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியிலும் அவரது பெயர் டேமேஜ் ஆகும். இதுவரை ரஜினி, தனுஷ் இருவருக்கும் இடையே அதிருப்தி தான் நிலவுகிறதே தவிர, யாரும் யாரையும் பகையாக கருதவில்லை. அதுமட்டுமின்றி கஸ்தூரி ராஜா தரப்பிலும், ரஜினி தரப்பிலும் மீண்டும் தனுஷ், ஐஸ்வர்யா இணைந்து வாழ வேண்டும் என்ற முயற்சிகளில்தான் இருந்து வருகின்றனர்.
#image_title
அதுமட்டுமின்றி தன் தங்கை சவுந்தர்யாவை போல, மறுமணம் செய்துக்கொள்ளும் எந்தவிதமான எண்ணமும் ஐஸ்வர்யாவுக்கு இல்லை. ஏனெனில் பிள்ளைகள் வளர்ந்த நிலையில் உள்ளனர். எனவே, திருமணத்துக்கு முந்தைய உறவில் எப்படி இருந்தார்களோ, அப்படி ஒரு நிலையில்தான் இப்போது தனுஷ், ஐஸ்வர்யா இருந்து வருகின்றனர். ரஜினிக்காக மட்டுமே இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு போகாத நிலையில், அவருக்காக மட்டுமே விரைவில் அவர்கள் இருவரும் ஒன்று சேர்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
106 வயதில் எப்படி இப்படியெல்லாம் சண்டை காட்சிகளில் நடிக்க முடியும் என்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் சங்கர் பதிலளித்துள்ளார். இயக்குனர்…
பிரபல சீரியல் நடிகையான ரட்சிதா மகாலட்சுமி குட்டை டவுசரில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது…
நடிகை பிரணிதா நீச்சல் குளத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பெங்களூருவை பூர்விகமா கொண்டவர் பிரணிதா.…
எங்களுடைய அப்பா எங்களை சினிமாவுக்குள் வர விட்டதே கிடையாது என்று கேஎஸ் ரவிக்குமாரின் மகள் மல்லிகா ஒரு பேட்டியில் கூறி…
நடிகை திரிஷாவுடன் சேர்ந்து அந்த சப்போட்டிங் கேரக்டரில் நடித்த பிறகுதான் தன்னுடைய சினிமா கேரியர் முடிந்து விட்டதாக நடிகை அர்ச்சனா…
முதல் மரியாதை படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். இதில் இடம்பெற்ற 8 பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. சிவாஜி கணேசனின் சினிமா…