போடு ரகிட ரகிட…. இனி கட்டணம் இல்லாமல் டிக்கெட் கேன்சல்… விமான பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….!

By Nanthini on கார்த்திகை 6, 2025

Spread the love

விமான பயணிகளின் புகார்களை தொடர்ந்து டிக்கெட் ரத்து மற்றும் பணத்தை திருப்பி அளிக்கும் நடைமுறையை மாற்றி அமைக்க DGCA புதிய வரைவு விதிகளை முன்மொழிந்துள்ளது. குறிப்பாக விமான டிக்கெட் முன்பதிவு செய்த 48 மணி நேரத்திற்குள் எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் டிக்கெட்டை ரத்து செய்ய அல்லது மாற்ற முன்மொழிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்களின் கருத்துக்களை பெற்ற பிறகு நவம்பர் 30-ஆம் தேதிக்கு பிறகு விதிகள் இறுதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் இந்தச் சலுகை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது. உள்நாட்டு விமானப் பயணமாக இருந்தால், முன்பதிவு செய்த தேதியிலிருந்து 5 நாட்களுக்குள் புறப்படும் விமானங்களுக்கும், சர்வதேச விமானப் பயணமாக இருந்தால் 15 நாட்களுக்குள் புறப்படும் விமானங்களுக்கும் இந்த வசதி பொருந்தாது. மேலும் இது நேரடியாக விமான நிறுவனத்தின் இணையதளம் வழியாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.