சென்னை கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு காவலராகப் பணியாற்றி வந்தவர் விஷ்வநாத் (27). தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கே.கே.நகர் காவல் நிலையக் குடியிருப்பில் தனது நண்பர்களுடன் தங்கிப் பணியாற்றி வந்தார். சமீபகாலமாக இவர் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டுகளில் அதிக அளவு பணத்தை முதலீடு செய்து விளையாடி வந்ததாகக் கூறப்படுகிறது.
ஆன்லைன் விளையாட்டில் தொடர்ச்சியாகப் பணத்தை இழந்ததால், விஷ்வநாத் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார். இதனால் கடுமையான மன உளைச்சலிலும் விரக்தியிலும் இருந்த அவர், கடந்த சில நாட்களாகக் யாருடனும் சரியாகப் பேசாமல் தனிமையிலேயே இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு விஷ்வநாத்தைப் பார்ப்பதற்காக அவரது நண்பர்கள் அறைக்குச் சென்றுள்ளனர். அப்போது, அறையின் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மின்விசிறியில் விஷ்வநாத் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்று வரும் துறை சார்ந்த மானியக் கோரிக்கை விவாதத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு…
பரந்தூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் அறிவித்திருப்பது, தமிழக அரசியல் மற்றும் பொருளாதாரக் தளங்களில்…
கடந்த ஆட்சிக்காலத்தில் தனியார் மற்றும் சிறுபான்மையினப் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதற்காகக் கட்டாயப்படுத்திப் பணம் வசூலிக்கப்பட்டதாக நிதியமைச்சர் மரியவில்சன் சட்டப்பேரவையில் புயலைக்…
ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவோம் என்ற முதன்மை முழக்கத்துடன் அதிகாரத்தைக் கைப்பற்றிய தமிழக வெற்றிக் கழக அரசுக்கு, ஆட்சிப் பொறுப்பேற்ற…
தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியாகவும் அவை முன்னவராகவும் செயல்பட்டு வரும் கே.ஏ. செங்கோட்டையன், சமீபத்தில்…
தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமைந்த கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும், தமிழக வெற்றி கழகத்திற்கு தனித்து…