தமிழகத்தில் புதிய அரசு அமைந்து பல்வேறு அரசியல் நகர்வுகள் நடந்து வரும் வேளையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசில், பிரபல முன்னணி நடிகை த்ரிஷாவுக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்று அவர் லேசாகக் கொளுத்திப் போட்டுள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய ஆர்.பி.உதயகுமார், நடிகை த்ரிஷா என்பவர் நட்புக்கும் உறவுக்கும் ஒரு மிகச்சிறந்த இலக்கணமாகத் திகழ்ந்து வருபவர் என்று குறிப்பிட்டுள்ளார். திரையுலகில் பல ஆண்டுகாலமாகத் தொடர்ந்து வரும் இந்த ஆழமான நட்பின் அடிப்படையில், முதலமைச்சர் விஜய் எப்போது வேண்டுமானாலும் த்ரிஷாவைத் தமிழ்நாட்டின் அடுத்த துணை முதல்வராக அறிவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அவர் தனது அரசியல் கணிப்பை முன்வைத்துள்ளார்.
திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து குறுகிய காலத்திலேயே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள முதலமைச்சர் விஜய், தற்பொழுது வரை தனது அமைச்சரவையிலோ அல்லது கட்சியிலோ அடுத்தகட்டப் பொறுப்புகள் குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்காத நிலையில், அதிமுக மூத்த தலைவரின் இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது. தவெக மற்றும் அதிமுக ஆகிய இருதரப்புத் தொண்டர்களிடையேயும் இந்த விவகாரம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் கடுமையான விவாதப் பொருளாக மாறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு குடும்பத் தகராறு இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது. கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட மோதலில், மனைவி…
உத்திரப்பிரதேசம் மாநிலம், புலந்த்ஷெர் மாவட்டம் ஜஹாங்கிராபாத் பகுதியில் நாயைக் காப்பாற்ற முயன்றபோது அதிவேகமாக வந்த கார் மின் கம்பத்தின் மீது…
ஆக்ரா எக்தா காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், 17 வயதுடைய இளம்பெண் ஒருவர் நேற்று மாலை 6:30…
கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியில் ஆன்லைன் டெலிவரி செயலியான 'பிலிங்கிட்' மூலம் வாடிக்கையாளர் ஒருவர் முட்டை ஆர்டர் செய்துள்ளார். டெலிவரி…
மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் துகாராம் முண்டேவின் அதிரடி நடவடிக்கையால், மும்பை வீதியோர உணவகங்களில் பெரும் மாற்றம்…
தன் காதலனுடன் ரெஸ்டாரண்ட், ஹோட்டல் மற்றும் மால் போன்ற இடங்களுக்குச் சென்று சுற்றிப்பார்க்கக் கையில் பணமில்லாமல் தவித்த இளம்பெண் ஒருவர்,…